states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பிரிட்டனில் “முடியாட்சி யில் இருந்து குடியாட்சி யாக” மாற்றவேண்டும் என அந்நாட்டு மன்னர் சார்லஸுக்கு எதிராக பல்வேறு தரப்பிலும் இருந்தும் கடந்த சில நாட்களாக எதிர்ப்பு கிளம்பியிருந்த நிலை யில், புதனன்று மன்னர் சார்லஸ் மக்களோடு உரையாடி கொண்டிருக் கும் போது அவர் நின்ற திசையை நோக்கி சில முட்டைகள் கீழே விழுந்து உடைந்தது. ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் டுவிட்டர் பக்கத் தில்  #NotMyKing என்ற  ஹேஸ்டேக்கும் டிரெண்  டாகி வருகிறது.

தமிழ்நாடு அரசின் ஆன்  லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு இன்  னும் ஒப்புதல் வழங்கப் படாத நிலையில், ஆளு நர் ரவியை கடந்த 5-ஆம்  தேதி ஆன்லைன் விளை யாட்டு கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்து பேசியுள்ளனர். இது  தொடர்பாக ஆளுநர்  மாளிகை செய்திக்குறிப்பு எதுவும் வெளியிடவில்லை என தகவல் வெளியாகி யுள்ளது.

வெளிநாடு சூதாட்ட நிறு வனங்களின் விளம்பரங் களை நிறுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு கூகுள் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. 

வங்கக்கடலில் உருவாகி யுள்ள மாண்டோஸ் புயல் காரணமாக தமிழ்நாட் டின் டெல்டா மாவட்டங் களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தேசிய பேரி டர் மீட்புப் படையின்  (NDRF) குழு தஞ்சாவூரில்  தயார் நிலையில் வைக் கப்பட்டுள்ளது.

ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதிக்கு 40-க்கும் மேற்பட்ட காட்டு யானை கள் கூட்டமாக இடம் பெயர்ந்துள்ள நிலையில், அப்பகுதி கிராம மக்கள் விவசாய நிலங்களுக்கு செல்லும்போது பாது காப்பாகவும், எச்சரிக்கை யாகவும் இருக்குமாறு மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி அறி வுறுத்தியுள்ளார்

கும்பகோணத்தில் அம் பேத்கரை அவதூறு செய்  யும் விதமாக இந்து மக்கள் கட்சி ஒட்டிய போஸ்டர் விவகாரத்தில் அச்சக உரி மையாளர் மணிகண்டன் கைது. இந்து மக்கள் கட்சி பிரமுகர் குருமூர்த்தி மீது  பதிவு செய்யப்பட்ட அதே  5 பிரிவுகளில் மணிகண் டன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளளது

இந்தோனேசியாவில் திருமணமாகாதவர்கள் பாலியல் உறவு கொள்ள தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ள நிலை யில், வெளிநாட்டவருக் கும் இச்சட்டம் பொருந்  தும் என அறிவிக்கப்பட்  டது. வெளிநாட்டின ருக்கும் இந்த சட்டம் பொருந்தும் என்றால் நாட்டின் சுற்றுலாத்துறை பாதிக்கும் என இந்தோ னேசியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் நெருக்கடி நிலைமை கிறிஸ்தவ தேவாலயங்களையும் விட்டு வைக்கவில்லை. எரிபொருட்கள் விலை அதிகரித்துள்ளதால் வழிபாட்டு நேரங்களைக் குறைக்கத் தொடங்கியுள்ளனர். ஸ்வீடன் போன்ற நாடுகளில் நேரத்தை மட்டுமில்லாமல், சில நாட்களில் வழிபாடு இல்லை என்றும் அறிவித்து வருகிறார்கள். நிலைமை சீரடையும் வரையில் வழக்கமான வழிபாட்டு நேரங்களைப் பின்பற்ற இயலாது என்று தேவாலயங்களின் நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.

பாலஸ்தீனத்தின் மேற்குக் கரைப்பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளிக்குள் இஸ்ரேல் ராணுவம் புகுந்தது. இதை இஸ்ரேல் ராணுவம் மறுத்தாலும், பள்ளியில் உள்ள வீடியோ காமிராக்கள் அவர்கள் உள்ளே நுழைந்ததைப் பதிவு செய்துள்ளன. அவர்கள் உள்ளே நுழைய முயன்றபோது பள்ளி நிர்வாகத்தினர் தடுக்க முயன்றது, அவர்களை மீறி ராணுவம் அத்துமீறி நுழைந்தது ஆகிய காட்சிகள் பதிவாகியுள்ளன. ஏற்கனவே இதுபோன்ற சம்பவமொன்றில், பள்ளிக்கூடத்தையே இஸ்ரேலியர்கள் இடித்துத் தள்ளியது குறிப்பிடத்தக்கதாகும்.

ஈரானில் மதவழக்கப்படியான உடைகளை அணிகிறார்களா இல்லையா என்பதைக் கண்காணிப்பதற்கான சிறப்புக் காவல்துறைப் பிரிவைக் கலைக்கப் போவதாக அறிவித்து விட்டாலும், மக்களின் எதிர்ப்புக் குரல் அடங்கவில்லை. மூன்று நாள் வேலை நிறுத்தத்திற்கு போராட்டக்காரர்கள் தயாராகி வருகிறார்கள். பாலின ரீதியான பாரபட்சங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தங்கள் போராட்டத் தளத்தை விரிவுபடுத்தி வருகிறார்கள்.