மதுரை, நவ.1- பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக வியாழ னன்று மதுரை வரும் ஆளுநருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர்-புறநகர் மாவட்டக்குழுக்களின் சார்பில் கருப்புக் கொடி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் உள்ளிட்ட கோப்புகளில் கையெழுத்திட மறுக்கும் ஆளுநர் தமது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தியும், விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யாவிற்கு, டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட மறுத்ததுடன் தமிழ்நாடு ஆளுநர் மாளிகையை பாஜக கட்சி அலு வலகமாக மாற்றி ஆர்எஸ்எஸ்-பாஜக ஆதர வாளராகச் செயல்பட்டு வரும் ஆளுநர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் இந்த போராட்டம் அறி விக்கப்பட்டு உள்ளது. வியாழன் காலை சரியாக 8.30 மணியளவில் மதுரை - தேனி சாலையில் காமராசர் பல்கலைக்கழகம் அருகிலுள்ள நாகமலைப் புதுக்கோட்டையில் நடை பெறும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநகர் மாவட்டச் செய லாளர் மா.கணேசன் ஆகியோர் தலைமையேற் கின்றனர்.