“நான் கீதையைப் படித்திருக்கி றேன், பல உபநிடதங்களைப் படித்திருக்கிறேன், பல இந்து நூல்களைப் படித்திருக்கிறேன்... ஆனால், பாஜக கருதும் எதுவும் இந்து மதத்தில் இல்லை. நம்மைவிட பலவீனமான மக்களைப் பயமுறுத்தி தீங்கிழைக்க வேண்டும் என எந்த இந்து நூல்களிலும் நான் படித்தது இல்லை. கற்றறிந்த எந்தவொரு இந்து மதத்தவரும், இவ்வாறு கூறி நான் கேட்டதில்லை. சிலரே அவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்து மதத்திற்கும் பாஜகவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை ஆர்எஸ்எஸ், பாஜக-வினர், தங்களைக் குறிப்பிட்டுக் கொள்ளும் ‘இந்து தேசியவா திகள்’ என்பதே தவறான சொல்லாடல். அவர்களுக்கும் இந்து மதத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை. அவர்கள் (பாஜக-வினர்) இந்து தேசியவாதிகள் அல்ல. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் செயல்பா டுகளுக்கும் இந்து மதத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை.
பட்டியல் வகுப்பினரை முடக்க முயற்சிக்கிறார்கள்
நாட்டில் மிகப்பெரிய அளவில் சமத்துவ மின்மை நிலவுகிறது. ஆட்சி அதிகாரம் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு எந்த இடமும் வழங்குவதில்லை. பட்டியல் வகுப்பினர், பிற்படுத்தப்பட்டோர், சிறு பான்மையினர், பழங்குடியினர் ஒடுக்கப்படு கின்றனர். அவர்களின் வளர்ச்சியை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் முடக்கப் பார்க்கிறது. சிறுபான்மையினர் என்பதாலேயே முஸ்லிம்கள் அவமதிக்கப்படுவார்கள் என்றால் எனக்கு அத்தகைய இந்தியா வேண்டாம். தங்கள் சொந்த தேசத்தி லேயே சிறுபான்மையின மக்கள் அசவுகரி யமாக உணர்வார்கள் என்றால் அது இந்தியாவுக்கு அவமானம். பிரதமர் தீர்க்கமான முடிவெடுத்தால் நாளையே இந்தியாவில் வன்முறை நின்று விடும். ஆனால், எந்த விலை கொடுத்தாவது அதிகாரத்தை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்த வேண்டும் என நினைக்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரை இந்திய சாதிக் கட்டமைப்பிற்கும், சமூகக் கட்ட மைப்பிற்கு ஆபத்து வந்துவிடக் கூடாது. அதற்காக அவர்கள் எதையும் செய்வார்கள். அவர்கள் (ஆட்சியாளர்கள்) ஒரு சிலரின் (குறிப்பிட்ட பிரிவினரின்) ஆதிக்கத்தை விரும்புகிறார்கள், அதைத்தான் அவர்கள் செயல்படுத்த நினைக்கிறார்கள். அவர்க ளுக்கு இந்து மதம் என்பதே இவ்வளவு தான்.
பிரான்ஸ் நாட்டின் சயின்ஸஸ் போ (Sciences Po University) பல்கலைக்கழக மாணவர்களுடனான உரையாடலின் போது காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி கூறியதிலிருந்து..