states

பிற மொழிகளை அழிக்கப்பார்க்கிறது பாஜக

திருவள்ளூர், ஜன.25-  திருவள்ளூர் மாவட்ட திமுக  சார்பில் திருவள்ளூரில் மொழிப் போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த  பொதுக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.  அப்போது உரையாற்றிய அவர்,  ‘‘தமிழுக்காக உயிர்நீத்தவர்கள்தான் மொழிப்போர் தியாகிகள். தங்களின் தேக்கு மர தேகத்தை தீயால் எரித்துக் கொண்டவர்கள்தான் மொழிப்போர் தியாகிகள். தியாக வரலாற்றை மீண்டும் மீண்டும் சொல்வது, தமிழி னம் தாழ்ந்துவிடக் கூடாது என்ப தற்காகத்தான்.  உலகம் முழுவதும் தமிழ்நாட்டு இளைஞர்கள் வலம்வர இரு மொழிக் கொள்கையே காரணம். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி யை வைத்து பிற மொழிகளை அழிக்கப்பார்க்கிறது பாஜக. இந்தி மொழியை திணிப்பதை தனது வழக்  கமாக கொண்டுள்ளது பாஜக. இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் தொடரும்’’ என கூறினார்.