மோடி அரசு பதவியேற்றதிலிருந்து அனைத்து உணவுப் பொருட்களும் விலையேறியுள்ளன. இதனை கீழ்கண்ட ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ விவரங்களே பறைசாற்று கின்றன. கடைகளில் இதைவிட அதிகமாகவே விலைகள் இருக்கும் என்பதை கூறத்தேவை இல்லை.
மேலும் பெட்ரோல்/டீசல்/சமையல் வாயு விலைகளும் மோடி ஆட்சியில் தாறுமாறாக ஏறியுள்ளன. மோடி அரசாங்கம் 2014ல் பதவியேற்ற பொழுது 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு விலை உருளை ஒன்றுக்கு ரூ.410 ஆக இருந்தது(மானியம் உட்பட). இது 2018ல் ரூ.838 ஆக உயர்ந்தது. ஆனால் 2019 தேர்தல் காலத்தில் 590 ஆக குறைக்கப்பட்டது. மீண்டும் 2023 ஆகஸ்டில் 1118ஆக உயர்ந்தது. 2024 தேர்தல் என்பதால் ரூ.200 குறைக்கப்பட்டுள்ளது.
தனது சூழ்ச்சியை மக்கள் உணரமாட்டார்கள் என பா.ஜ.க. அரசு மனப்பால் குடிக்கிறது போலும்.