சதித்திட்டத்திற்காக மசூதிகளில் கோவில்களை தேடுகிறது பாஜக
தேடுகிறது பாஜக “பாஜக சதித்திட்டம் மூலம் ஒவ்வொரு மசூதியிலும் கோவிலைத் தேடுகிறது. பாஜக வினர் ஒவ்வொரு மசூதியிலும் ஒரு கோவி லைத் தேடினால், மக்கள் ஒவ்வொரு கோவிலி லும் ஒரு புத்த மடாலயத்தைத் தேடத் தொடங்குவார்கள். உத்தரகண்டின் பத்ரி நாத், கேதார்நாத் கோவில்கள் புத்த மடால யங்கள் தான் என்பதை பாஜகவினர் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்” -
சமாஜ்வாதி தலைவர் சுவாமி பிரசாத் மவுரியா
லாலுவின் ரூ.6 கோடி மதிப்பு சொத்து முடக்கம்
மணிப்பூர் வன்முறை தொடர்பாக விளக்கம் அளிக்க முடியாமலும், எதிர்க் கட்சிகளின் விமர்சனங்களை எதிர் கொள்ள முடியாமலும் திணறும் மோடி அரசு, பிரச்சனையை திசை திருப்ப அம லாக்கத்துறை மூலம் காய் நகர்த்தி வரு கிறது. நில மோசடி தொடர்பாக பீகார் முன் னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினரின் ரூ.6 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அம லாக்கத்துறை பறிமுதல் செய்தது.
120 ஆண்டுகளுக்குப் பிறகு மழைகுறைவு
புதுதில்லி, ஜூலை 31- ஜூலை மாதத்தில் நாடு முழுவதும் 31.59 செ.மீ. மழை பெய்துள்ளது. கிழக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களை தவிர நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 13% அதிகம் பெய்துள்ளது. 1901க்குப் பின் ஜூலையில் இயல்பைவிட குறைவாக மழை பெய்துள்ளது இது 3-வது முறை என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி வெடிவிபத்து: ஒன்றிய அரசு அதிகாரிகள் ஆய்வு
கிருஷ்ணகிரி, ஜூலை 31- கிருஷ்ணகிரியில் பட்டாசு கிடங்கு வெடிவிபத்து தொடர்பாக ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் ரவி என்பவரின் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 கடைகள் தரைமட்டமாகின. இதில், பட்டாசு கிடங்கு உரிமையாளர் ரவி உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயம் அடைந்தனர். 10 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. இந்நிலையில், விபத்து நடந்த இடத்தை ஒன்றிய அரசின் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையில் வேலூர் மண்டலத்தைச் சேர்ந்த வெடிபொருள் நிபுணர் கணேஷ் தலைமையிலான 2 அலுவலர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பட்டாசு கிடங்கு உள்ளிட்ட 5 கடைகள் இருந்த கட்டிடத்தின் உரிமையாளர் மரிய பாக்கியத்தின் மகன் அந்தோணியிடம் விசாரணை நடத்தினர். மேலும், தரைமட்டமான கட்டிட இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட பெரிய குழாய் போன்ற வெடிக்காத வெடி, சணல், திரி, மருந்து நிரப்பும் கட்டைகள், வெடி விபத்தில் தரைமட்டமான பட்டாசு கிடங்கில் மண் உள்ளிட்ட பொருட்களை ஆய்வுக்காக சேகரித்தனர்.
திருச்சி விமானம் திடீர் தரையிறக்கம்
திருச்சிராப்பள்ளி, ஜூலை 31- 100-க்கு மேற்பட்ட பயணிகளுடன் சென்ற திருச்சியில் இருந்து ஷார்ஜா சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமா னம் கேரள தலைநகர் திருவனந்தபுரம் சர்வ தேச விமான நிலையத்தில் திடீரென தரையிறங்கியது. இதனால் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்ட நிலையில், அவசரமாக தரை யிறங்கவில்லை, விமானம் புறப்பட்ட பிறகு ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு கார ணமாக முன்னெச்சரிக்கையாக தரை யிறக்கப்பட்டது என ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது.
உலகச் செய்திகள்
ஏற்கனவே வாங்கிய கடன் தொகையை திரும்பச் செலுத்துவது பற்றி புதிய உடன்பாட்டை தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவும், சர்வதேச நிதியமும்(ஐ.எம்.எப்) எட்டியுள்ளன. இந்த உடன்பாட்டிற்கு ஐ.எம்.எப். வாரிய இயக்குநர்கள் ஒப்புதல் அளித்தால், 750 கோடி அமெரிக்க டாலர் அர்ஜெண்டினாவுக்குக் கிடைக்கும் என்று அந்நாட்டின் நிதியமைச்சரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மூன்று ஆண்டுகளில் ஈரானில் இருந்து சீனாவுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதி மூன்று மடங்காக அதிகரித்திருக்கிறது. 2020 ஆம் ஆண்டில் 3 லட்சத்து 24 ஆயிரம் பீப்பாய் கச்சா எண்ணெய் ஆக இருந்த ஏற்றுமதி, தற்போது பத்து லட்சம் பீப்பாயாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் சட்டவிரோதப் பொருளாதாரத் தடைகள் ஈரானின் ஏற்றுமதியைப் பாதிக்கவில்லை.
ஜெர்மனியின் மிகப்பெரிய ஆயுதம் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றான ரீன்மெட்டல், உக்ரைனின் பீரங்கிகளை சரி செய்து தரத் திட்டமிட்டிருக்கிறது. ரஷ்யா வுடனான மோதலில் பழுதான மற்றும் சிதைந்து போன பீரங்கிகளை சரி செய்யப் போகிறார்கள். ஏற்கனவே 2 கோடி அமெரிக்க டாலர் முதலீட்டில் உக்ரைனின் ஒரு பீரங்கித் தொழி ற்சாலையை அமைக்கவும் அந்த நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
அமெரிக்காவில் கடந்த 7 மாத காலமாக கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் மீண்டும் பரவ தொடங்கி யுள்ளது. இதற்கு ஆதாரமாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள்,”கொரோனா பாதிப்பு டன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துள்ளதாக” கூறியுள்ளன. ஆசிய கண்டத்தில் பரவலாக காணப்பட்ட கொரோனா வைரஸின் எக்ஸ்பிபி (XBB) பிறழ்வு அமெரிக்காவில் வேகமாக பரவி வருகிறது என நியூயார்க் லாங்கோன் மருத்துவ மையத்தின் பேராசிரியர் டாக்டர் மார்க் சீகல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“இசையை ஊக்குவிப்பது ஒழுக்க சீர்கேட்டை ஏற்படுத்து கிறது. இசையை இசைப்பது இளைஞர்களை வழி தவறச் செய்யும்” என்ற சொற்றொடர் மூலம் ஆப்கானிஸ் தானில் ஆட்சி செய்யும் செய்து வரும் தலிபான்கள் பொது மக்கள் மற்றும் இசைக் கலைஞர்களிடம் இருந்து கிட்டார், தபேலாவை பறிமுதல் செய்து பொது இடங்களில் எரித்து வருகின்றனர். மேலும் இசை “இஸ்லாமுக்கு எதிரானது” என்றும், தலிபான் பொது இடங்களில் இசையை இசைப்பதை தடை செய்வதாகவும் தலிபான் அரசு அறிவித்துள்ளது.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஆப்கானிஸ்தானின் எல்லையான கர் நகரில் ஜமியத் உலமா இஸ்லாம்-பாஸ்ல் (JUI-F) கட்சியைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் ஞாயிறன்று அரசியல் பேரணியை நடத்தினர். இந்த பேரணியில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 44 பேர் உயிரிழந்த நிலையில், தற்கொலைப் படை தாக்குதலின் பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதக் குழு இருப்பதாக பாகிஸ்தான் போலீசார் கண்டறிந்துள்ளனர்.