“நாட்டின் ஜனநாயகம், அரசியலமைப்புச் சட் டத்தை பாஜக அழிக்கத் துடிக்கிறது. எதிர்க் கட்சித் தலைவர்களை அதிகாரத்தைக் கொண்டு நசுக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. பாஜக ஆட்சியால் சிறு, குறு தொழில்முனைவோர், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலை யில்தான் நாங்கள் பாஜக-வுக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ளோம். மாநில அளவில் எதிர்க்கட்சிகள் இடையே வேறுபாடுகள் உள்ளன. எனினும் தேசத்தின் நலன் கருதி ஒன்றுசேர்ந்துள்ளோம். அரசியலமைப்புச் சட்டம், ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதியைக் காப்பதே எதிர்க்கட்சிகள் நோக்கம். பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் ஆசைப்படவில்லை. ஆட்சியதிகாரத்தை விட மக்கள் நலனே எங்களுக்கு முக்கியம். எதிர்க்கட்சி களின் ஒற்றுமையைக் கண்டு, இப்போதே மோடி பயப்படத் துவங்கிவிட்டார். அமலாக்கத்துறை போன்ற அமைப்புக்களை எதிர்க்கட்சிகளின் மீது ஏவி மிரட்டு கிறார். கடந்த தேர்தலில் தனியாக பாஜக 303 இடங்களைப் பிடிக்கவில்லை. கூட்டணி கட்சிகளின் வாக்குகளைப் பெற்றே ஆட்சியமைத்தது. அவ்வாறு ஆட்சியமைத்த பின், அவர்களை கழற்றி விட்டது. இப்போது ஒவ வொரு மாநிலமாக கூட்டணிக்காக பாஜக தலைவர் அலைந்து கொண்டிருக்கிறார். தில்லியில் பாஜக கூட்டணி கூட்டத்தை கூட்டுகிறார். அந்தக் கூட்டணியில் 38 கட்சிகள் இருப்பதாக கூறுகிறார்கள். அந்த 38 கட்சிகள் எங்கே இருக்கின்றன? என்று தெரியவில்லை. கூட்டணி யில் யார் வழிநடத்துவார்கள் என்று கேட்கிறார். அதற்கா கத்தான் ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட உள்ளது. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்காக தில்லியில் ஒரு செய லகம் அமைக்கப்பட உள்ளது. பாஜக-வின் தோல்விகளை மக்கள் முன்பு எடுத்துச் செல்வோம். எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘இந்தியா’ (இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைப்பு கூட்டணி) என பெயர் சூட்டியுள்ளோம்.”
மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் தலைவர்