states

ரூ.44 ஆயிரம் கடனை ரூ.1.48 லட்சமாக மாற்றிய பாஜக அரசு

சென்னை,பிப்.18- நாட்டில் ஜனநாயகம் தழைக்க பட வேண்டும் என்றால், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று அமைச்சர் சேகர்பாபு தெரி வித்தார். சென்னை எழும்பூரில்  சமய நல்லி ணக்க பேரவை அமைப்பின் சார்பில் ‘மதவெறி மாளட்டும் மனித நேயம் ஆளட்டும்’ என்கிற தலைப்பில் கருத்தரங்கம் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு ,செஞ்சி மஸ்தான் மற்றும் சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பி.கே.சேகர்பாபு, “நாட்டில் ஜனநாயகம் தழைக்க பட வேண்டும் என்றால், இன மதங்களுக்கு அப்பால் மனிதன் மனித நேயத்துடன் வாழ வேண்டு மென்றால், ஒருவரை ஒருவர் பாராட்ட வேண்டும். மேலும் ஏற்றத் தாழ்வுகள் அகற்றப்பட வேண்டும் என்றால், மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது” என்றார். மதத்தால், இனத்தால், மொழி யால் மக்களை பிளவுபடுத்தி மனி தனை அந்நியமாக்கி அதன் மூலம் தேர்தலில் வாக்குகள் பெற லாம் என்று துடித்துக் கொண்டிருப்ப வர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு இஸ்லாமியர்கள் தங்களது வாக்கு களை முழுமையாக போட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். பின்னர் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், “இந்திய நாடு பன்முகம் கொண்ட நாடு. ஈரோடு இடைத் தேர்தலில் இஸ்லாமிய பெருமக்கள் நான் சொன்னதைக் கேட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தி மாபெரும் வெற்றியை பெற்று தந்தார்கள். அதேபோன்றுதான் வருகின்ற மக்களவைத் தேர்தலிலும் இஸ்லாமிய பெருமக்கள் தங்களது வாக்குகளை செலுத்தி மாபெரும் வெற்றியை தேடி தர வேண்டும்” என்றார். நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்கும் போது இந்தியா வுக்கு ரூ.56 லட்சம் கோடி கடன் இருந்தது. ஆனால், அது தற்போது ரூ. 139 கோடி கடனை நாட்டின் மீது சுமந்திருக்கிறார். இது தான் நிர்வாகத்தின் சீர்கேடு. தனி மனிதனின் கடனாக ரூ. 44,348 இருந்ததை தற்போது ரூ.1 லட்சத்து 48 ரூபாய் ஒவ்வொரு தனி மனிதனின் தலையில் கடன் சுமத்தப் பட்டிருக்கிறது. இந்த ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.