திரிபுராவில் தற்போது பாஜக ஆட்சியில் இருந்தாலும், சிபிஎம் மிகவும் சவாலாக அசைக்க முடியாத சக்தியாக உள்ளது என அம்மாநில பாஜக முதல்வர் மாணிக் சாஹா வெளிப்படை யாகவே ஒப்புக்கொண்டுள்ளார். “திரிபுரா மாநிலத்தில் கடந்த 6 ஆண்டு களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இல்லை என்றா லும், எப்பொழுதும் போல மாநிலத்தில் அசைக்க முடியாத முக்கிய அரசியல் சக்தியாகவே உள்ளது. இதை ஆளும் பாஜகவால் ஒரு போதும் புறக்கணிக்க முடியாது. திரிபுராவில் 1978 முதல் 1988 வரை பத்தாண்டு காலமும், பின்னர் 1993 முதல் 2018 வரை 25 ஆண்டுகள் ஆட்சி செய்ததில் இருந்து சிபிஐ(எம்) கட்சிக்கு ஆதரவாளர்களும், நலம் விரும்பிகளும் மாநிலம் முழுவதும் இன்னும் நிறைந்து உள்ள னர். இதனால் மக்களவை தேர்தலில் பாஜகவின் வெற்றி எப்போ தும் தோன்றும் அளவுக்கு எளிதானது அல்ல. கடந்த ஆண்டு நடை பெற்ற சட்டமன்றத் தேர்தலில் கூட இரண்டு முக்கிய தொகுதிகளை பாஜக இழந்துள்ளது. இதனால் மக்களவை தேர்தலை கவனமாக கையாள்வது நல்லது” என பாஜகவினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கலக்கத்தில் பாஜக தொண்டர்கள்
கடந்த காலங்களை போல் அல்லாமல் வரவிருக்கும் மக்களவை தேர்தல் பாஜகவிற்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகிய நிலையில், சிபிஎம் மிகவும் சவாலாக உள்ளது, அதனால் கவனமாக தேர்தலை சந்திப்பது நல்லது என அம்மாநில முதல்வர் மாணிக் சாஹாவின் தோல்வி பயப் பேச்சு அம்மாநில பாஜக தொண்டர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.