தேசிய மலரான தாமரை, பாஜக வுக்கு தேர்தல் சின்னமாக வழங்கப்பட்டதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம், தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. தேசிய மலரான தாமரையை ஒரு அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி எனவும், இது நாட்டின் ஒருமைப்பா ட்டை இழிவுபடுத்தும் செயல் எனவும் கூறி, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும், அகிம்சை சோசலிச கட்சியின் நிறுவன தலைவருமான டி.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார். “பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்யக் கோரி கடந்த செப்டம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கப் படவில்லை. இந்த மனுவை பரி சீலித்து, பாஜக-வுக்கு ஒதுக்கப்பட்ட தாமரை சின்னத்தை ரத்து செய்ய வேண்டும்” என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை, தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன்னிலையில் செவ்வாயன்று நடைபெற்றது. அப்போது மனுதாரர் தரப்பில், “தாமரை தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாநில அரசுகளும் அதை மாநிலச் சின்ன மாக அறிவித்துள்ளன. தாமரை ஒரு மதச் சின்னம் என்பதால், பாஜக வுக்கு தாமரை சின்னம் ஒதுக்கியது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி யும், சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தர வின்படியும் தவறு. அதுமட்டுமின்றி அரசு சின்னங்களில் தாமரை இடம் பெற்றுள்ளதால் இது தேர்தல் நடத்தை விதிகளை மீறியது” என்று சுட்டிக்காட்டப்பட்டது. இந்த வாதங் களைக் கேட்ட நீதிபதிகள், மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.