சென்னை, செப்.30- பாஜகவுடனான தேசிய ஜன நாயக கூட்டணியிலிருந்து, அதி முக விலகிவிட்டதாக கடந்த செப் டம்பர் 25 அன்று அதிமுக அறி வித்தது. எனினும், அதிமுக-வோடு பாஜக தேசியத் தலைமை பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் பாஜக கூட்டணியில் அதிமுக இணையும் என்றும் எச். ராஜா, புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி போன்றோர் கூறிவந்தனர். இதையடுத்து, பாஜக-வின் கூட்டணியிலிருந்து விலகும் தங்க ளின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை; இனிமேல் எந்தச் சூழ லிலும் பாஜகவோடு அதிமுக கூட் டணி சேராது; 2024 தேர்தலில் புதிய கூட்டணியை அதிமுக உருவாக் கும் என்று அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனு சாமி தெளிவுபடுத்தினார். எச்.ராஜா பாய்ச்சல் இதனால், ஆத்திரம் அடைந்த பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, ஜெயலலிதா மறைவிற்குப் பின், பாஜக மட்டும் உதவி செய்யாமல் போயிருந்தார் அதிமுக நெல்லிக் காய் மூட்டை போல சிதறியிருக் கும்; அதை நன்றியுணர்வுடன் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதேபோல பாஜக தமிழக பொறுப்பாளரான சி.டி. ரவி, திருவள்ளுவர் மண்ணான தமிழ்நாட்டில் தாமரை மலரும் என்று கூறியிருந்தார். மற்றொரு புறத்தில், அதிமுக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், பண்ருட்டி ராமச்சந்தி ரன் போன்றோர் பாஜக-வுக்கு எடப்பாடி துரோகம் செய்து விட்ட தாகவும், அண்ணாமலையைப் பற்றிப் பேச எடப்பாடிக்கு அரு கதை இல்லை என்றும் விமர்சித் திருந்தனர்.
கே.பி. முனுசாமி பதிலடி
இந்நிலையில், அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி சனிக்கிழமை யன்று மீண்டும் செய்தியாளர் களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதா வது: பாஜகவுடன் கூட்டணி குறித்த அதிமுக-வின் நிலைப்பாடு குறித்து நாங்கள் ஏற்கனவே அறிவித்து விட்டோம். எங்கள் கூட்டணியில் இருந்து பாஜக-வை வெளியேற்றி விட்டோம். எங்கள் தலைவர்களை தொட ர்ந்து விமர்சித்ததாலயே இந்த முடிவு எடுக்கப்பட்டது என விளக்க மும் கொடுத்து விட்டோம். திமுக அரசை கலைக்க பாஜக அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுத் தோம் எனவும் அதனால்தான் கூட்டணி முறிந்தது என்ற தக வலை கூறியுள்ளனர். அதிமுக ஆரம்பித்து 50 ஆண்டுகளில், 30 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி யில் இருந்துள்ளது. அப்படிப்பட்ட ஒரு கட்சி இது போன்ற கீழ்த்தர மான செயலை என்றைக்கும் செய்யாது.
பாஜக எங்கிருந்து வருகிறது?
‘2026-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை யை முதல்வர் வேட்பாளாரக ஏற்க வேண்டும். அண்ணாமலையை முதல்வராக்க வேண்டும் என எங் களை பாஜக வலியுறுத்தியது. இதனால்தான் பாஜக உடனான கூட்டணியையே முறித்து கொண்டோம்’ என முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பணன் கூறி யிருப்பது, சமூகவலைதளங்க ளில் வந்த தகவல்களின் அடிப்ப டையிலானது ஆகும். அண்ணா மலையை முதல்வர் வேட்பாள ராக நிறுத்த பாஜக கூறவில்லை. எங்களின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று எதிர்க்கட்சி தலைவராக இருக்கி றார். அவரைத்தான் 2026-இல் முதல்வர் வேட்பாளராக முன்னி றுத்த உள்ளோம். இதில் பாஜக எங்கிருந்து வருகிறது. இவர் களாக கற்பனை செய்துகொண்டு எங்கோ இருக்கிறவர்கள் (பாஜக) நாங்கள் வருகிறோம் என்று சொல்கிறார்கள்.
எச். ராஜா பேசுவது கீழ்த்தரமானது
2024 நாடாளுமன்றத் தேர்த லில் அவர்களை (பாஜக-வை) மக்கள் எந்த அளவுக்கு ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளட்டும். பாஜக-வின் எச். ராஜா எங்களை நெல்லிக் காய் மூட்டை என்றும், தற்போது பாரம் குறைந்துள்ளது எனவும் கண்மூடித்தனமாக, கீழ்த்தரமாக பேசுகிறார். எங்கள் தயவால்தான் அவர் வெற்றி பெற்று சட்டப்பேர வைக்குச் சென்றார் என்பதை மறந்து விடக்கூடாது. ஒன்றிய பாஜக அரசுக்கும் பல்வேறு சட்டங்களை இயற்ற அதிமுக ஆதரவு அளித்துள்ளது என்பதை யும் மறந்து விடக்கூடாது. இவ்வாறு கே.பி. முனுசாமி பதி லடி கொடுத்துள்ளார்.