இரட்டைமலையாருக்கு பிறந்தநாள்: முதல்வர் வாழ்த்து
சென்னை,ஜூலை 7- ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக் கான பாடுபட்ட இரட்டைமலை சீனிவாசனின் பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித் திருக்கிறார். அதில் “தமிழகப் பட்டியலின மக்களின் முதல் பட்டதாரி, அம்பேத்கர், அயோத்திதாசப் பண்டிதர், காந்தி போன்ற பேராளுமைகளோடு இணைந்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடியலுக்காக உழைத்த ‘திராவிடமணி’ இரட்டைமலை யாரின் பிறந்த நாளில் அவரது பங்களிப்பு களை நினைவுகூர்ந்து போற்றுகிறேன்” இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
கடுமையான குளிர் அலையா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்
சென்னை, ஜூலை 7- “தமிழ்நாட்டில் கடுமையான குளிர் அலை” வீசம் என்று எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் ட்விட்டர் பக்கத்தில், “சூரிய னில் இருந்து தொலை தூர நிலைக்கு பூமி செல்லும் நிகழ்வு காரணமாக தமிழகத்தில் குளிர் அலை வீச வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இது போன்ற எந்த அறிவிப்பை யும் சென்னை வானிலை ஆய்வு மையம் வழங்கவில்லை” என்று தெரிவித்துள்ளது.
ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
சென்னை,ஜூலை 7- தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக உள்துறை செயலா ளர் பனிந்தீர ரெட்டி வெளியிட்டுள்ள உத்தரவு வருமாறு:- “லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜி பவானீஸ்வரி, லஞ்ச ஒழிப்புத் துறை இணை இயக்குநராக நியமனம் செய்யப்படுகிறார். சென்னை அமல்படுத்துதல் பிரிவு ஐஜி துரை குமார், லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாக நியமிக்கப் படுகிறார். கட்டாய காத்திருப்புப் பட்டிய லில் இருந்த வந்திதா பாண்டே, புதுக்கோட்டை எஸ்.பி.-யாக நியமிக்கப் பட்டுள்ளார்” இவ்வாறு அந்த தெரிவிக்கப் பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பில் சிக்க வேண்டாம்: தலைமைச் செயலாளர் அறிவுரை
சென்னை,ஜூலை 7- நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்துக்குள் அமல்படுத்த வேண்டும் என அனைத்து துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தி, தலைமைச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்தில் அமல்படுத்த வேண்டும் எனவும், அதன் மூலம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தவிர்க்கலாம் எனவும் வழக்கு ஒன்றில் தலைமை நீதிபதி அமர்வு தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தி யிருந்தது. மேலும், நீதிமன்ற உத்த ரவுகளை குறித்த காலத்தில் அமல்ப டுத்த முடியாவிட்டால் மேல் முறை யீடு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தவிர்க்க, நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்தில் அமல்படுத்த வேண்டும் எனவும், இல்லாவிட்டால் மேல் முறையீடு செய்ய வேண்டும் என வும் அனைத்து துறை அதிகாரிக ளுக்கும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கடிதம் அனுப்பியுள்ளதாக தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறி ஞர் ரவீந்திரன், தலைமை நீதிபதி அமர்வில் வியாழனன்று (ஜூலை 7) தெரிவித்தார். மேலும், அந்த கடித நகலையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி மாலா அமர்வு ஏற்றுக் கொண்டது.
நடிகர் ராம்குமார்- பிரபு மீது சகோதரிகள் வழக்கு
சென்னை,ஜூலை 7- மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிரபு, ராம்குமார் என இரு மகன்களும், சாந்தி, ராஜ்வி என இரு மகள்களும் உள்ளனர். 2001ஆம் ஆண்டு நடிகர் சிவாஜி கணேசன் உயிரிழந்ததற்கு பின், 270 கோடி ரூபாய் சொத்துக்களை முறையாக நிர்வகிக்க வில்லை எனவும் வீடுகளின் வாடகை பங்கை வழங்காமல் சகோதரர்கள் தங்களை ஏமாற்றியதாகவும் கூறி சாந்தி, ராஜ்வி ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும், அந்த மனுவில், ‘இந்து வாரிசுரிமை சட்டத்தில் 2005ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தம் காரணமாக, தந்தை சிவாஜி கணேசனின் சொத்துக்களில் தங்களுக்கும் உரிமை உள்ளதால் பாகப்பிரிவினை செய்து தர உத்தரவிட வேண்டும். மேலும், தங்களுக்கு தெரியாமல் தந்தை சொத்துக்களை அவர்கள் விற்றுள்ள னர். அந்த விற்பனை பத்திரங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும். ஆயிரம் சவரன் தங்க நகைகளையும், 500 கிலோ வெள்ளி பொருள்களையும் பிரபுவும், ராம்குமாரும் அபகரித்துக் கொண்டனர். சாந்தி திரையரங்கி லிருந்த ரூ. 82 கோடி மதிப்பிலான பங்குகளை பிரபுவும், ராம்குமாரும் அவர்கள் பெயருக்கு மாற்றியுள்ளனர். தந்தை சிவாஜி கணேசன் எழுதி வைத்ததாக கூறப்படும் உயில் ஜோடிக்கப் பட்டது. பொது அதிகார பத்திரத்தில் கையெழுத்து பெற்று தங்களை ஏமாற்றி விட்டனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள் ளது. இந்த வழக்கில் நடிகர் பிரபு, ராம்குமார் தவிர, இருவரின் மகன்களாக விக்ரம் பிரபு, துஷ்யந்த் ஆகியோரும் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.