states

‘என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக ஆட்சியில் பல்லாயிரம் கோடி அரசு சொத்துக்கள் கபளீகரம்’

 புதுச்சேரி, அக்.8- புதுச்சேரியில் என் ஆர்.காங்., பாஜக  கூட்டணி அரசில் மக்கள் சொத்துக் களுக்கு பாதுகாப்பு இல்லை என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி சாடி னார். புதுச்சேரியில் செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:-  புதுச்சேரியில் போலி பத்திரங்கள் தயாரிப்பது, நிலங்களை அபகரிப்பது, தனியார் சொத்துக்களை வேறு நபருக்கு பட்டா போடுவது, கோவில்  நிலங்களை அபகரிப்பது, அரசு புறம் போக்கு நிலங்களுக்கு பத்திர பதிவு செய்வது என பத்திரப்பதிவுத்துறை தொடர் ஊழலில் ஈடுபட்டுள்ளது. சிபிஐ காரைக்காலில் சார்பதிவாளர் மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டார்.  அவர் வாக்குமூலத்தில் யாருக்கு லஞ்சம் செல்கிறது என தெரிவித்துள் ளார். புதுவை காமாட்சி அம்மன் கோவில் நில வழக்கில் சார்பதிவாளர், பத்திரப்பதிவு துறை செயலாளர் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் உயர்நீதி மன்றம், நிலத்தை மீண்டும் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதை வலி யுறுத்தி இந்தியா கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். புதுவையில் பல போலி பத்திரங் ்கள் தயாரிக்கப்படுகிறது. 32 போலி பத்திரங்கள் தயாரிக்கப்பட்டு, ஏற்க னவே பதிந்துள்ள பத்திரங்களை எடுத்து விட்டு, போலி பத்திரத்தை வைத்து பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் கபளீகரம் செய்யப் பட்டுள்ளது.  பதிவுத்துறையில் இன்டெக்ஸ் புத்தகம், கைரேகை புத்தகம் இருக்கும். இன்டெக்ஸ் புத்தகத்தில் பக்கத்தை எடுத்து விட்டு, போலி பத்திரம் செய்த வர்களின் பட்டியலை இணைக்கின் றனர்.

இதற்கு அதிகாரிகள், ஊழியர்கள்  துணையாக உள்ளனர். 29 பத்திரம் உழவர்கரை, 3 பத்திரம் பாகூர் சார்பதி வாளர் அலுவலகத்தில் பதியப் பட்டுள்ளது. பதிவுத்துறைக்கு தொடர்பில்லாதவர்கள் உள்ளே நுழைந்து அதிகாரிகள் ஒத்துழைப் போடு பத்திரங்களை மாற்றியுள்ளனர். ஒரு மாதம் முன்பு இதை மாற்றி யதற்கான ஆதாரங்கள் உள்ளது. இது குறித்து உதவி ஆட்சியர் விசாரணை  நடத்தியுள்ளனர். இதில் அரசியல்வாதி கள் பின்னணி உள்ளது. ஒரு பத்தி ரத்திற்கு ஒரு எண் தான் தருவார்கள். ஆனால் 2 பத்திரத்துக்கு ஒரே எண் அளிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பத்திரப்பதிவு ஊழலுக்கு என்.ஆர்.காங்கிரஸ், பாஜக  கூட்டணி ஆட்சிதான் காரணம். பொது மக்களின் பத்திரத்திற்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது. யார் சொத்தையும் யாருக்கு வேண்டு மானாலும் எழுதி கொடுக்கும் நிலை உள்ளது. பத்திரப்பதிவுத் துறை யில் இமாலய ஊழல் நடக்கிறது. நில அபகரிப்பு கூட்டம் அரசியல்வாதிகளின் துணையோடு இந்த செயல்களில் ஈடு பட்டுள்ளது. இந்த பத்திரப்பதிவுக்கு முதலமைச்சரும் உடந்தையாக உள்ளார். புதுவையில் உள்ள மக்களின் சொத்துக்களுக்கு பாதுகாப்பு இல்லாத தரம்கெட்ட என்ஆர்.காங்கிரஸ், பாஜக ஆட்சி நடக்கிறது.  போலி உயில், பத்தி ரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் அதை முன்னிறுத்தி பல கட்ட  போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.