சென்னை, ஆக,25- பள்ளிக் கல்வியில் ஆண்டுக்கு இரு முறை பொதுத் தேர்வு ஆபத்தானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு; ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கை 2020 வழக்கொழிந்து போக வேண்டிய வருணாசிரம, சனாதன கருத்தியலின் நவீன வடிவமைப்பு என்பதால் நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதனை நிறுத்தி வைத்து, அது தொடர்பான வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இப்போது அந்த வல்லுநர் குழு நீண்ட சில நூறு பக்கங்கள் கொண்ட அறிக்கையை பரிந்துரைகளுடன் வெளியிட்டுள்ளது. இதில் பள்ளிக் கல்வி நிலையில் ஆண்டுக்கு இரு பொதுத் தேர்வு என்ற புதிய தேர்வு முறை அறிவிக்கப்பட்டுள்ளது. இரு முறை தேர்வில் எந்தத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளதை மாணவர்கள் அடுத்த நிலைக்கு செல்ல பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதில் மாணவர்க ளுக்கு வாய்ப்பு வழங்குவதாக தெரிவித் திருந்தாலும், உண்மையில் பிற்படுத் தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டு, பட்டி யலின பழங்குடி மாணவர்களை வடிகட்டி வெளியேற்றும் நோக்கம் கொண்டதாகும். அண்மையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா “பிற மொழிகளை (மாநில மொழி - தமிழ் நாட்டில் தமிழ்) தாய் மொழியாக கொண்டவர்கள் இந்தி மொழியை எதிர்ப்பின்றி ஏற்க வேண்டும் என்று அகங்காரத்துடன் பேசிய பேச்சுக்கு செயல் வடிவம் தரும் முயற்சியாகும். அரசின் வஞ்சகத் திட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு அறிவிப்பை திருப்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.