states

அதிகமானோரை வேலையில் ஈடுபடுத்துவதன் மூலமும் நாட்டின் உற்பத்தியை அதிகரிக்கலாம்!

பெங்களூரு, அக். 28 - இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று இந்தியப் பெருமுதலாளிகளில் ஒருவரும், ‘இன்போசிஸ்’ நிறுவன ரும், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மாமனாருமான ஆர்.என். நாராயண மூர்த்தி கூறியிருந்தார். “மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் வேலை உற் பத்தித் திறன் குறைவாக உள்ளது. மற்ற உலக நாடுகளுடன் போட்டிப் போட நாம் தயாராக வேண்டும். நமது இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்யத் தயாராக இருக்க வேண்டும்” என்பதுதான் இந்திய இளைஞர்களுக்கு முதலாளி நாராயண மூர்த்தி வழங்கிய ‘அறி வுரை’ ஆகும். அவரின் இந்தப் பேச்சுக்கு, சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பும் கண்டனங்களும் எழுந்தன. உழைப்புச் சுரண்டல் மூலம் முதலாளியாகி இருக் கும் நாராயண மூர்த்தி இப்படித்தான் பேசுவார்.. அது முதலாளிகளின் வர்க்கக் குணம் என்று பலரும் விமர்ச னங்களை வைத்து வருகின்றனர். ஆனால், வேறு சிலர், தேசபக்தி, தேசவளர்ச்சியை மனத்தில் வைத்தே  நாராயண மூர்த்தி பேசியதாக சப்பைக் கட்டிக் கொண்டிருக்கின்றனர். ‘ஓலா’ நிறுவனத் தலைவர் உள்ளிட்டவர்கள் நாராயண மூர்த்தி பேச்சை வரவேற் றுள்ளனர். இந்நிலையில், நாளொன்றுக்கு 12 மணிநேரம் வேலைவாங்குவது, உழைப்புச் சுரண்டல் என்பது ஒருபுற மிருந்தாலும், மருத்துவ ரீதியாகவே, 12 மணிநேர வேலை மனிதர்களுக்கு ஆபத்து; இளைய வயதிலேயே மார டைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.  குறிப்பாக, பெங்களூருவில் பிரபல மருத்துவமனையில் மூத்த இதய நோய் வல்லுநராக பணியாற்றும் தீபக் கிருஷ்ணமூர்த்தி இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.  “ஒரு நாளைக்கு 24 மணி நேரம் இருக்கிறது.

அதில் நீங்கள் வாரத்தில் 6 நாட்கள் வேலை செய்தால்.. ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். மீதமுள்ள 12 மணி நேரத்தில் தூக்கத்திற்கு 8 மணி நேரம் அவசியம்.. இப்போது மீதம் நமக்கு 4 மணி நேரம் உள்ளது. பெங்களூரு போன்ற நக ரத்தில் வேலைக்குச் சென்று வரவே 2 மணி நேரம் ஆகும். மீதம் இரண்டு மணி நேரம் இருக்கிறது. அது குளிப் பது, சாப்பிடுவது போன்ற அன்றாட பணிகளுக்குத் தேவைப்படும். இப்படி இருந்தால் நம்மைச் சுற்றி இருப்போருடன் பழக நேரம் இருக் காது. குடும்பத்துடன் பேச நேரம் இருக்காது. உடற்பயிற்சி செய்ய நேரம் இருக்காது. பொழுது போக் கிற்கு நேரம் இருக்காது. வேலை செய்யும் நேரத்தைத் தாண்டியும் மெயில்களுக்கு ஊழியர்கள் பதில் அளிக்க வேண்டும் என்றே இப்போது பெருநிறுவனங்கள் எதிர்பார்க்கின் றன. இவ்வாறான நிலை தொடர்ந் தால், இளைஞர்களுக்கு மார டைப்பு ஏற்படலாம்” என்று தீபக் கிருஷ்ணமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். “நாட்டின் வளர்ச்சிக்காகத்தானே நாராயண மூர்த்தி 12 மணிநேர வேலையை வலியுறுத்துகிறார்” என்று வைக்கப்படும் வாதங்களுக்கும் டாக்டர் தீபக் கிருஷ்ணமூர்த்தி பதில ளித்துள்ளார். அதில், அதாவது வேலைவாய்ப்புகளை இரட்டிப்பாக் கினால் நாட்டில் வேலையின்மை குறையும். அதுமட்டுமல்ல, அதிகமா னோரை வேலையில் ஈடுபடுத்துவதன் மூலம், வேலைசெய்ய வேண்டிய நேரம் குறைவதுடன், நாட்டின் வளர்ச்சியையும் உறுதி செய்ய முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.