states

தீக்கதிர் விரைவு செய்திகள்

தில்லிக்கு பார்சல் அனுப்ப தடை

ஆகஸ்ட் 15 அன்று நாடு முழுவதும் சுதந்திர  தினவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில், அசம்பா வித சம்பவங்கள் நடந்து விடக் கூடாது என்பதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக விமானநிலை யங்கள், முக்கிய ரயில் நிலை யங்களில் தீவிர கண்கா ணிப்பில் பாதுகாப்பு படை யினர் ஈடுபட்டுள்ளனர். நாடு  முழுவதும் இருந்து ரயில் களில் தலைநகர் தில்லிக்கு  பார்சல் அனுப்ப தடை விதிக் கப்பட்டுள்ளது.  

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி ரத்து

சென்னை பனையூரில் நடைபெறவிருந்த ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், இசை நிகழ்ச்சிக்கு வந்த வர்கள் ஒரே நேரத்தில் திரும்  பிச் சென்றதால் பனையூர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

பாஜக கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்

“தமிழ்நாட்டின் கள நில வரத்தை புரிந்து கொள்ளா மல், தமிழ்நாட்டு மக்கள் மீது  இந்தியையும், சமஸ்கிரு தத்தையும் திணிக்க முயல்வ தும், அதிகார மமதையில் ஆட்சியில் இருந்து கொண்டு  தமிழ்நாட்டு மக்களை கிள் ளுக் கீரையாக நினைத்தால் அதன் விளைவுகளை பாஜக  மோசமான அளவில் எதிர் கொள்ள வேண்டியிருக்கும். தமிழ்நாட்டு மக்கள் எதையும் சகித்துக் கொள்வார்கள். ஆனால், இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிப் பார்களேயானால் தமிழ்நாடு  தழுவிய கடுமையான போரா ட்டத்தை மீண்டும் நடத்த வேண்டிய நிலை ஏற்படும்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத் துள்ளார். 

சென்னையில் கனமழை

தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்றி காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் சனியன்று கன மழை பெய்துள்ளது. கேளம் பாக்கம், நாவலூர், புதுப் பாக்கம், மாம்பாக்கம், கோவளம், முட்டுக்காடு, திருப்போரூர், மீனம்பாக்கம் உள்பட பல பகுதிகளில் கன மழை பெய்தது. சென்னை  மற்றும் புறநகர் பகுதிகளில்  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என  சென்னை வானிலை ஆய்வு  மையம் எச்சரிக்கை விடுத் துள்ளது. 

நாங்குநேரி சம்பவத்திற்கு நிவாரணம்

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நிகழ்ந்த பள்ளி மாணவ ரையும் அவரது தங்கையை யும் சக மாணவர்கள் அரி வாளால் வெட்டிய சம்ப வத்தை நேரில் பார்த்து  மாரடைப்பால் இறந்த  கிருஷ்ணன் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் அனுதா பங்களை தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், கிருஷ்ணனின் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு ரூ.3 லட்சம் நிவா ரணம் வழங்க உத்தர விட்டுள்ளார்.

பேரழிவு செயல்முறை கபில் சிபல் கருத்து

காவல்துறையை அரசியல் காரணங்களுக்காக தவறாக பயன்  படுத்துவதுதான் நமது நாட்டின் பிரச்சனையாகும். பாஜக எங்  கெல்லாம் ஆட்சியில் இருக்கி றதோ அங்கெல்லாம் எதிர்க்கட்சி கள் தாக்குதலுக்கு உள்ளாகின் றன. காவல் படைகள் அதிகாரத்தில்  உள்ள அரசியல்வாதிகள் உத்த ரவைக் கேட்டுத்தான் நடக்கின்றன.  இந்த அடிப்படையில் பார்க்கும் போது, காவல்துறை அல்லது அம லாக்க முகமைகளுக்கு 60-90 நாட்கள் காவலில் வைக்க அதி காரம் கொடுப்பது பேரழிவிற்கான செயல்முறையாகும். தேசத் துரோக சட்டம் மற்றப்பட்டதும், எந்த சூழலில் ஒரு நபரை விசாரிக்கலாம் என்று வரையறுக்காமல் தேசிய பாதுகாப்பு தொடர்பான விதிகள் மாற்றப்பட்டுள்ளது. ஒருபக்கம் காவல்துறைக்கு அதிக அதிகாரம் வழங்குகிறார்கள். மற்றொரு பக்கம் மக்களின் குரலை ஒடுக்குகிறார்கள். இது ஏற்றுக்கொள்ள முடியாதது.

உலக யானைகள் தினம்: முதல்வர் வாழ்த்து

சென்னை, ஆக.12- உலக யானைகள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளி யிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் விலைமதிப்பற்ற கானுயிர்க் காக்க நமது அரசு உறுதி  பூண்டுள்ளது. அகத்தியமலை யானை கள் காப்பகம் அறிவிப்பு, இரு யானை  முகாம்கள் மேம்படுத்தல், சிதைந்த காடுகளை மீளுருவாக்கம் செய்து  மீட்டெடுப்பது, யானைப் பாதுகாவ லர்களின் நலன் காப்பது, வனத்துறை நவீனமயம், தெர்மல் கேமராக்கள் கொண்டு செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மூலம் யானைகள் கண் காணிப்பு உள்ளிட்ட புதுமையான தீர்வு கள் என யானைகளைக் காப்பதில் உறுதியாக இருக்கிறோம். கோவையில் நடந்து வரும் யானை கள் பாதுகாப்பு மாநாடு இதனை மேலும் வலுப்படுத்தும். அனைவரும் இணைந்து உருவத்தால் பெரிய இந்த அழகிய உயிரினத்தின் எதிர் காலத்தைப் பாதுகாப்போம். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் கூறியுள்ளார்.

சென்னையில்  80 ஆயிரம் தேசிய கொடிகள் விற்பனை

சென்னை, ஆக.12- நாட்டின் 76-வது சுதந்திர தின விழா  வருகிற 15 ஆம் தேதி கொண்டாடப் படுகிறது. இதையொட்டி, அனைத்து தபால் நிலையங்களில் தேசிய கொடி  விற்பனை தொடங்கியது. கடந்த 7 ஆம்  தேதியில் இருந்து சென்னை உள்பட தமிழ்நாட்டின் அனைத்து தபால் நிலையங்களில் தேசிய கொடி விற்பனை நடந்து வருகிறது. ஒரு கொடியின் விலை ரூ.25. நேரி லும், தபால் மூலமாகவும் பெறலாம். ஆன்லைன் வழியாக புக் செய்தால் வீட்டிற்கே தேசியக் கொடி வந்து சேரும். பொதுமக்கள் மட்டுமின்றி அரசு அலுவலகங்கள், தனியார் நிறு வனங்கள் மொத்தமாக தேசிய கொடியை கேட்டாலும் நேரில் சென்று  வழங்கவும் தபால் துறை தயாராக உள்ளது. தமிழ்நாட்டில் 20 லட்சம் தேசியக் கொடிகள் விற்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தபால் துறை மூலம் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.சென்னை மண்டலத்தில் இதுவரையில் 80 ஆயிரம் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக அத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் தேசிய கொடியை வாங்க வேண்டும் என்பதற்காக ஞாயிற்றுக்கிழமையும் தபால்  நிலையங்களில் தேசிய கொடி விற்பனை நடைபெறும். தனிநபரா கவோ, கூட்டமாகவோ, தொழில் நிறுவ னம் அல்லது ஒன்று, இரண்டு தேசியக்  கொடி கேட்டாலோ வழங்கப்படும் என்றார்.

ஆக.15 டாஸ்மாக் கடைகள் மூடல்

சென்னை, ஆக.12- நாடு முழுவதும் 15 ஆம் தேதி சுதந்திர  தினம் கோலாகலமாக கொண்டாடப் படுகிறது இதையொட்டி விரிவான  பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன. இந்நிலையில், தமிழ்நாட்டில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என டாஸ்மாக் நிர்வா கம் அறிவித்துள்ளது. அனைத்து மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மதுபான சில்லறை விற் பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மூடப்பட்டி ருக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை  மேற்கொள்ளப்படும் எனவும் டாஸ்மாக்  நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள் ளது.

பச்சை நிற பால் பாக்கெட்டுகள்  விலை உயர்த்தப்படவில்லை: ஆவின் 

சென்னை, ஆக.12- ஆவின் பச்சை நிற 5 லிட்டர் பால்  பாக்கெட்டுகள் விலை அதிகரிக்கப் பட்டதாக வெளியான செய்தி தொடர் பாக நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “ஆவின் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டு வரு கிற 5 லிட்டர் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் விலை அதிகரிப்பு என்று  ஊடகங்கள் மூலம் செய்தி பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மூலமாக சென்னை முழுவதும் நாள் ஒன்றுக்கு சுமார் 15 லட்சம் லிட்டர் பால் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனத்தில் வழங்கப் பட்டு வருகின்ற பச்சை நிற பால் பாக்கெட் பொது மக்களுக்கு ஒரு லிட்டர்  ரூ.44 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் வணிக நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்படும் ஐந்து லிட்டர் பால்  ரூ.210க்கு விற்பனை செய்யப் பட்டது. எனவே வணிக நிறுவனத்திற்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் விலையிலே வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் தற்பொழுது 42X5 ரூ. 210 லிருந்து ரூபாய் 220 (44X5=220)ஆக மாற்றப்பட்டுள்ளது. இதை ஊடகங்கள் தவறாக புரிந்து  கொண்டு ஆவின் நிறுவனம் பச்சை  நிற பால் பாக்கெட்டுகளின் விலையை  உயர்த்தி விட்டதாக தெரிவித்துள்ளது. உண்மையில் பொதுமக்கள் பயன் பாட்டில் உள்ள அதே விலையை வணிக பயன்பாட்டு நிறுவனங்களுக்கு வழங்க வணிக நிறுவனங்களுக்கான விலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது”. இவ்வாறு தெரிவித்துள்ளது.

அயோத்தி மேம்பாட்டுத் திட்டத்தில் பெரும்  நிதி முறைகேடுகள் : சிஏஜி அறிக்கையில் அம்பலம்

புதுதில்லி, ஆக.12- அயோத்தி மேம்பாட்டுத் திட்டத்தில் பெரும் நிதி முறைகேடுகள் நடந்ததாகக் கட்டுப்பாடு மற்றும் தணிக்கை (சிஏஜி) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015 ஜனவரி முதல் மார்ச் 2022 வரை ‘ஸ்வதேஷ் தர்ஷன்’ திட்டத்தின் கீழ் அயோத்தி மேம்பாட்டுத் திட்டம் ஒன்றிய அரசால் செயல்படுத்தப்பட்டது. ‘செயல் திறன் உத்தரவாதமாக’ ஒப்பந்ததாரர் செலுத்த வேண்டிய 3.11 கோடி ரூபாய் 1.86 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் உள்ள குப்தர்காட்டில் பணியை 14 ஒப்பந்ததாரர்களுக்கு ஒதுக்கிய போது ஒப்பந்தத் தொகையை முடிவு செய்வ தில் ஏற்பட்ட குளறுபடியால் ரூ.20 லட்சம் இழப்பு ஏற்பட்டது. ஒப்பந்த பணிகள் வழங்கப்பட்ட பிறகு சில ஒப்பந்ததாரர்களின் ஜிஎஸ்டி பதிவு ரத்து செய்யப்பட்டது. அதை கணக்கில் கொள்ளாமல் ஜிஎஸ்டி பலன்களை வழங்குவ தும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியது. ஒப்பந்ததாரர்கள் செய்யாத பணிகளுக்கு ஊதியம் வழங்குவதையும் சிஏஜி கண்ட றிந்துள்ளது.  அயோத்தி திட்டம் மட்டுமின்றி, கோவாவில் உள்ள சிறைச்சாலை, இமயமலை சுற்றுச் சுவர், தெலுங்கானா பாரம்பரிய சுற்று, மத்தியப் பிரதேசத்தில் புத்த சர்க்யூட் போன்ற திட்டங்களை செயல்படுத்துவதிலும் நிதி முறைகேடுகள் நடந்துள்ளன. இத்திட்டங்களை செயல்படுத்துவதில் நடந்த முறைகேடுகளால் மொத்தம் சுமார் 20 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.