சென்னை, மே 17- நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. உதகையில் நடைபெறும் இந்த ஆண்டிற்கான கோடை விழாவில், 200 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக தீட்டுக்கல்லில் மே 13 முதல் 30ஆம் தேதி வரை ஹெலிடூரிசம் என்ற பெயரில் ஹெலிகாப்டர் சாகச சுற்றுலா நடை பெற உள்ளதாக நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. மலைப்பகுதிகளில் சுற்றுலா நோக்குடன் ஹெலிகாப்டர்களை இயக்குவதால் ஏற்படும் சிறிதளவு சத்தம் வனப்பகுதிக்குள் அதிக ஒலி அலைகளை ஏற்படுத்தி மக்கள், யானை உள்ளிட்ட விலங் குகள், பறவைகள் பாதிக்கப்படும் என்பதால் இந்த திட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை அண்ணா நகரை சேர்ந்த பேராசிரி யர் முருகவேல் சென்னை உயர் நீதி மன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
பறவைகள் மோதினால் ஹெலி காப்டர்கள் கடுமையாக பாதிக்கப் படும் என்றும், உரிய ஆய்வுகள் மற்றும் சாத்தியக்கூறுகளை ஆராயாமல் திட்டமிடப்பட்டுள்ள தாக மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் எம்.நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, காடுகளுக்கு இடைப்பட்ட நகர பகுதிகளில் மட்டுமே ஹெலி காப்டர்களை தரையிறக்க உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள நீதிபதிகள், முறையாக எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை திட்டம் அறிவிக் கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி யுள்ளனர். யானைகள், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் வாழும் நீலகிரி மாவட்டத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என நீதிபதிகள் கூறினர். அக்கறையற்ற முறையில் செயல்படுத்தப்படும் இதுபோன்ற வணிகரீதியான திட்டங்களால், பல்லுயிர் பெருக்க மண்டலம் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என தெரிவித்துள்ள நீதிபதிகள், நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் ஹெலி டூரிசம் சேவை திட்டத் துக்கு தடை விதித்து உத்தர விட்டனர்.