உத்தரப் பிரதேசத்தின் கோரக் பூரின் அரசு மருத்துவக் கல்லூரியான பாபா ராகவ் தாஸ் மருத்து வக் கல்லூரியின் நேரு மருத்துவமனை யில் 2017 ஆகஸ்ட் 10 இரவு திரவ ஆக்சி ஜன் தீர்ந்து போய்விட்டது. இதனால், அடுத்த இரண்டு நாட்களில், 63 குழந்தை களும், 18 பெரியவர்களுமாக 80 நோயாளி களுக்கு மேல் உயிரிழந்தார்கள். இந்த இரண்டு நாட்களிலும், மருத்துவமனையின் குழந்தைகள் மருத்துவப் பிரிவின் மிக இளம் மருத்துவரான டாக்டர் கஃபீல் கான் ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்க வும், அவசரகால சிகிச்சை அளித்து கூடு மானவரை இறப்புகளைத் தவிர்க்கவும், சக ஊழியர்களின் துணையோடு அசாதாரண முயற்சிகள் செய்தார். இந்த சோகச் சம்பவம் பற்றிய செய்தி நாடு முழுக்கப் பரவியபோது, இந்த நெருக்கடியைச் சமாளிக்க மெய்வருத்தம் பாராது பாடுபட்டு, நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை சீர்செய்ய வேண்டியதன் உடனடித் தேவை குறித்து கவனத்தை ஈர்த்த டாக்டர் கான், ஒரு கதாநாயகனாகப் புகழப் பட்டார். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு, அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட் டார். அவர் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது ஊழல், மருத்துவ கவனக்குறைவு உட்பட பல கடுமையான குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்குத் தொடரப்பட்டது. விரை விலேயே அவர் சிறையில் அடைக்கப் பட்டார். 2017 ஆகஸ்ட்டின் அந்த துயரமான இரவில் நடந்த சம்பவங்கள், முடி வற்ற இடைநீக்கம், எட்டு மாத சிறை வாசம், கடுமையான வெறுப்பு, துன்புறுத் தல்கள்... இவற்றினிடையே நீதிக்காக இடைவிடாத போராட்டத்தைத் தொடர்ந்த டாக்டர் கஃபீல் கான் எதிர்கொண்ட இடர்பாடுகள் குறித்த நேரடி அனுபவத் தொகுப்பே இந்நூல். கோரக்பூர் மருத்துவமனை துயரச்சம்பவம் : ஒரு மருத்துவரின் நினைவலைகள் டாக்டர் கஃபீல் கான் வெளியீடு : பாரதி புத்தகாலயம்
கோரக்பூர் மருத்துவமனை துயரச்சம்பவம் : ஒரு மருத்துவரின் நினைவலைகள்
டாக்டர் கஃபீல் கான்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்