வேலூர், மே 29- அணைக்கட்டு அருகே சாலை இல்லாததால் பாம்பு கடித்து உயிரி ழந்த பச்சிளம் குழந்தையின் உடலை பெற்றோரே 10 கி.மீ தொலைவுக்கு கால்நடையாகவே சுமந்து சென்று அடக்கம் செய்தனர். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகிலுள்ள அத்திமரத்துக்கொல்லை மலைக்கிராமம். இந்த கிராமத்தில் மே 26 அன்று பாம்பு கடித்த ஒன்றரை வயது குழந்தையை அணைக்கட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சாலைவசதி இல்லாததால் உடல் முழுவதும் நஞ்சு பரவி வழியிலேயே அக்குழந்தை இறந்து விட்டது. பின்னர், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் உடற்கூராய் வுக்குப் பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவசர ஊர்தி யில் எடுத்துச் செல்லப்பட்ட குழந்தை யின் உடல், சாலை வசதி இல்லாத தால் பாதியில் இறக்கப்பட்டு, 10 கி.மீ தொலைவுக்கு பெற்றோரே நடந்து சுமந்து சென்று அடக்கம் செய்துள்ள னர். இந்த செய்தி சமூக வலைத்தளங் களில் வைரலானது. இதனையடுத்து, மே 29 திங்களன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மற்றும் அதிகாரிகள் அந்த மலைகிராமத்திற்கு புறப்பட்டனர். அப்போது, கரடு முரடான சாலையில் மாவட்ட ஆட்சியரின் கார் செல்ல முடியாமல் சிக்கிக்கொண்டது. பிறகு, மாவட்ட ஊராட்சி குழுத் தலை வருடன் இருசக்கர வாகனத்தில் சென்று ஆட்சியர் பாதிக்கப்பட்ட குடும்பத் தினரை சந்தித்தார். அப்போது, ரூ. 25 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார். இதற்கிடையில், கிராம மக்களின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு, மலை கிராமத்திற்குள் மாவட்ட ஆட்சியரின் கார் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், “சாலை அமைப்ப தற்கான ஏற்பாடுகள் விரைந்து மேற்கொள்ளப்படும். அந்த கிராமத் திற்கு தேவையான மருத்துவ வசதி யும் செய்து தரப்படும்”என்றார்.