வாச்சாத்தி வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் நீதியை நிலைநிறுத்த நீண்டநெடிய போராட்டத்தை நடத்தியுள்ளது. இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே குறிப்பிடத்தக்க ஒரு வழக்காக இது உள்ளது. குற்றவாளிகள் மிக அதிக எண்ணிக்கையில் தண்டிக்கப்பட்ட வழக்காக வாச்சாத்தி வழக்கு உள்ளது. வாச்சாத்தி கொடுமை நடந்தது முதல் உயர்நீதிமன்ற தீர்ப்பு வரை அனைத்தையும் தொகுத்து சிறப்பிதழாக தீக்கதிர் நாளிதழ் வெளியிடுகிறது. 15.10.2023 ஞாயிறன்று வண்ணக்கதிர் இணைப்பாக இந்த சிறப்பிதழ் வெளியாகிறது. அன்றைய இதழ் விலை ரூ.7. மாவட்டக்குழுக்கள் சிறப்பிதழை பல்லாயிரக்கணக்கில் வாங்கி மக்களிடம் கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம். அந்தந்தப் பதிப்புகளில் முழுப் பணமும் செலுத்தி கூடுதல் பிரதிகளை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
- முதன்மை பொது மேலாளர்