states

தமிழில் குடமுழுக்கு கோரியவர்கள் மீது தாக்குதல்: பாஜக தலைவர் உட்பட 2 பேர் கைது

கிருஷ்ணகிரி,ஜூன் 29- தமிழில் குடமுழுக்கு கோரியவர்கள் மீது தாக்குதல் நடத்திய பாஜக தொழில்நுட்ப (ஐடி) பிரிவு தலைவர் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி மலை மீது  அமைந்துள்ள 800 ஆண்டு கள் பழமை வாய்ந்த ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் கோவில் ராஜகோபுர குடமுழுக்கு புதன்கிழமை (ஜூன் 28) நடைபெற்றது. இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள இந்த கோவில் கும்பா பிஷேக பணிகள் ஓசூரை  சேர்ந்த பொதுமக்கள் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி குட முழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என தமிழ் தேசிய  பேரியக்கத்தைச் சேர்ந்த வர்கள் இந்து அறநிலை யத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இதையறிந்த ஒரு கும்பல் தமிழ் தேசிய பேரியக்கத்தினர் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் காய மடைந்த மாரிமுத்து உள்ளிட்டோர் ஓசூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அப்போது பாஜக, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த 5 பேர் தான் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ஓசூர் நகர  பாஜக தகவல் தொழில் நுட்பப் பிரிவைச் சேர்ந்த மஞ்சுநாத் , பார்வதி நகரை  சேர்ந்த வினோத் ஆகி யோரை கைது செய்தனர். மேலும் இது தொடர் பாக விஎச்பி கிரண், பாஜக  முருகன், ஆதி ஆகிய  மூன்று பேரை காவல்துறை யினர் தேடி வருகின்றனர்.