பெங்களூரு, மே 30- கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் மீது கறுப்பு மை வீசப்பட்டது. ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஓராண்டாக தில்லியில் நடைபெற்ற போராட்டத்தை ஒருங்கிணைத்த தலைவர்களில் முக்கியமானவர் பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகாயத். இவர் பெங்களூரு காந்தி பவனில் கர்நாடக விவசாய சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் திங்களன்று பங்கேற்றார். அப்போது, மேடை அருகே வந்த ஒருவர் ராகேஷ் திகாயத்தை அங்கிருந்த மைக்கை எடுத்து தாக்கி னார். தொடர்ந்து மற்றொரு இளைஞர் ராகேஷ் மீது கருப்பு மையை வீசினார். இதுதொடர்பாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுகுறித்து ராகேஷ் திகாயத் கூறுகையில், ‘‘இந்த நிகழ்விற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படவில்லை. அரசுடன் கூட்டு சேர்ந்து தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது’’ என்று கூறினார்.