‘ரஷ்யாவிற்கு இழப்பு ஏற்படுத்துவதே அமெ.வின் நோக்கம்!’
ரஷ்யாவிற்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்துவது மட்டுமே அமெரிக்காவின் நோக்கம். எனவே போரில் இருந்து உக்ரைன் பின்வாங்கி தங்கள் வளங்களை ஆக்கப்பூர்வ வளர்ச்சிக்கு பயன்படுத்த நினைத்தால் அதற்கு அமெரிக்கா அனுமதிக்காது என அமெரிக்க முன்னாள் உளவு துறை அதிகாரி ரிட்டர் கூறியுள்ளார்.
சூழலியல் ஆர்வலர்கள் மீது தாக்குதல்
புதைபடிவ எரிபொருள் எடுக்கும் நிறுவனங்க ளுக்கு அரசு வழங்கும் மானியங்களை நிறுத்தக் கோரி நெதர்லாந்தில் போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான சூழலியல் ஆர்வலர்கள் மீது அந்நாட்டு காவல்துறை தண்ணீர் பீரங்கி மூலம் நீரைப் பீய்ச்சி அடித்து தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான் திரும்புகிறார் நவாஸ் ஷெரீப்
பனாமா ஆவண முறைகேடு தொடா்பாக,பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீஃப் 2017-ஆம் ஆண்டு தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின் 10 ஆண்டுகள் சிறைத் தண்ட னை விதிக்கப்பட்டது. சிறைத் தண்டனையிலிருந்து தப்ப மரு த்துவ சிகிச்சைக்காக லண்டன் சென்ற அவர் அடுத்த மாதம் நாடு திரும்ப இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நைஜருக்கு எதிராக பிரான்ஸ் படைகளை குவிக்கிறது?
நைஜருக்கு எதிராக இராணுவத் தலையீட்டை தொட ங்கும் நோக்கில் மேற்கு ஆப்பிரிக்க பொருளாதார கூட்டமைப்பு (ECOWAS) நாடுகளில் பிரான்ஸ் படைகளையும் ராணுவ உபகரணங்களையும் குவிப்பதாக நைஜர் ராணுவ தலைமையக செய்தித் தொடர்பாளர் கர்னல் அமடூ தேசிய தொலைக்காட்சியில் குற்றம் சாட்டியுள்ளார்.
இனவெறி செய்திகளை அனுப்பியவர்கள் கைது
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் இங்கிலாந்து அரச குடும்பபத்திற்கு எதிராக 2020 மற்றும் 2022 ஆண்டு களுக்கு இடையில் இனவெறி செய்திகளை அனுப்பிய ஐந்து ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள், குற்றத்தை ஒப்புக்கொண்ட தன் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.