வெள்ள பாதிப்புக்காக கழக அரசு நிவாரண நிதி கேட்டால், “நாங்கள் என்ன ஏ.டி.எம்-ஆ” என ஒன்றிய அமைச்சர் ஒருவர் கூறியதாக செய்தியாளர் எழுப்பிய கேள்வி க்கு, ‘அவர் அப்பா வீட்டுப் பணத்தைக் கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் அளித்த வரிப்பணத்தைத் தானே கேட்கி றோம்” என்று கூறினேன்.
என் பேச்சில் மரியாதை சற்று குறைவாக இருந்ததாக அப்போது சிலர் வருத்தப் பட்டார்கள். அடுத்த நாளே, “மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அவர்களுடைய அப்பா வீட்டு பணத்தைப் கேட்கவில்லை” என்று அவர்கள் கோரியபடியே மிகுந்த ‘மரி யாதையுடன்’ கேட்டுக்கொண்டேன்.
ஆனாலும், மாண்புமிகு ஒன்றிய நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், ‘பாஷை’ குறித்து இன்று பாடமெடுத்துள் ளார்கள்.
‘மீண்டும் சொல்கிறேன் ; மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் ‘மரியாதைக்குரிய’ அப்பா வீட்டுப் பணத்தை நாம் கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் செலுத்திய வரிப் பணத்தில் இருந்து தமிழ்நாடு அரசு கோரிய பேரிடர் நிவாரண நிதியைத்தான் கேட்கிறோம்.’
வழக்கமாக ஆண்டுதோறும் ஒதுக் கப்படும் மாநில பேரிடர் நிவாரண நிதியைத் தந்து விட்டு, ஏதோ ஒன்றிய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தந்தது போல அடித்துப் பேச வேண்டாம்.
நாங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் ‘மரியாதை’ தருவதற்குத் தயாராகவே இருக்கிறோம் – தமிழ்நாட்டு மக்கள் மீது கொஞ்சமாவது ‘அக்கறை’ வைத்து நிதியைத் தாருங்கள் மரியாதைக்குரிய மாண்புமிகு ஒன்றிய நிதி அமைச்சர் அவர்களே!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்