சென்னை,ஜூலை 29- சென்னையில் ஆசிய கடற்கரை விளை யாட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர் பாக ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு உரிய உத்தரவாதங்களை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விரைவில் வழங்க உரிய நட வடிக்கைகளை எடுக்கக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச் சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், சென்னையில் நடைபெற்ற 44-வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொண்டமைக்கும், இவ் விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதற்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்தமைக்கும் பிரதமருக்கு முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் ஆசிய கடற்கரை விளை யாட்டுப் போட்டிகளை நடத்துவ தற்குரிய ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ்நாடு அரசின் வேண்டுகோளையேற்று, 2024 ஜனவரியில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டி களை தமிழ்நாட்டில் நடத்துவதற்கு, 6.5.2022 அன்று தாஷ்கண்டில் நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டுள்ளதை முதலமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார். ஏற்கெனவே ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருக்கு இதுதொடர்பாக 23.5.2022 அன்று கடிதம் எழுதியுள்ளதாகவும், செப்டம்பர் 2022 இறுதிக்குள் ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு இந்த உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டி யுள்ளதால், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விரைவில் அதனை வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்கு மாறு தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.