ஒன்றிய பாஜக அரசு தனது அரசியல் எதிரிகளை பழிவாங்கும் செயலின் ஒரு பகுதியாக, அமலாக்கத்துறை, புலனாய்வு அமைப்புகளை தொடர்ந்து, தீவிரமாக தவறாக பயன்படுத்தி வருகிறது. பா.ஜ.க.வின் கொள்கைகளுக்கு எதிராக இருக்கும் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மீது நியாயமின்றி, தன்னிச்சையாக சோதனை என்ற பெயரில் அமலாக்கத்துறையை பயன்படுத்தி ஒன்றிய அரசு மனரீதியாக நெருக்கடி கொடுக்கிறது. பாஜக-வின் அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் மனைவி ரினிகி புயன் சர்மாவுடன் தொடர்புடைய பிரைட் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கிசான் சம்பதா திட்டத்தின் ஒரு பகுதியாக உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகத்திடம் இருந்து முறைகேடாக ரூபாய்10 கோடி மானியம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை. பாஜகவினர் அனைவரும் சத்ய அரிச்சந்திரன்களா?
காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை