பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் நிச்சயமற்ற சூழல் காணப்பட்டு வருகிறது. முதலீட்டாளர்கள் புதிய முதலீடுகளை மேற்கொள்ள தயக்கம் காட்டி வரும் நிலையில், தங்கள் வசமுள்ள பங்குகளை விற்று வெளியேறும் நிகழ்வு மிக மோசமான அள வில் அதிகரித்துள்ளது. இதனால் கடந்த 5 நாட்க ளாக இந்திய பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டு வரும் நிலையில், 6-வது நாளாக வியாழனன்றும் இந்திய பங்குச்சந்தைகள் சரிந்தன. பங்குச்சந்தை வீழ்ச்சியால் ரூ.3.5 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநிலம் உமாரியா மாவட்ட நீதிபதியாக இருந்து ய்வு பெற்றவர் பிரேம் சின்ஹா (63) மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரேம் சின்ஹா ஓய்வு பெற்ற பின்பு தீர்பாயத்தின் உறுப்பினராக பணி யாற்றி வந்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகர் மற்றும் பீட் விரைவுச் சாலை என இரண்டு பகுதிகளில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 9 பேர் உயிரி ழந்தனர்.
ரூ.1 லட்சம் மதிப்புள்ள சோனி ஸ்மார்ட் டிவியை ஆர்டர் செய்த நபருக்கு ரூ.15 ஆயிரம் மதிப் புள்ள சாதாரண தாம்சன் டிவியை அனுப்பி யுள்ளது பிளிப்கார்ட் ஆன்லைன் தளம்.
ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி யின் (பிடிபி) தலைவராக முன்னாள் முதல் வர் மெகபூபா முப்தி மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
இமாச்சலப்பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சிம்லா இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அபுதாபி யில் இருந்து வந்த பயணி ஒருவர் கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ.26.93 லட்சம் ரூபாய் மதிப் புள்ள 499.9 கிராம் எடையுள்ள நான்கு கச்சா தங்கச் சங்கிலிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
ஜம்மு - காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் வியாழனன்று காலை இந்திய ராணுவத்தினரால் 2 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.