மதுரை, நவ. 30 - மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ‘நியோமேக்ஸ்’ நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணத்தை இரட்டிப்பாக தருவதாகவும், மாதத்திற்கு 12 முதல் 30 சதவிகிதம் வரை வட்டி தருவதாகவும் அறிவிப்புகளை வெளியிட்டது. இதனை நம்பி ஏராளமானோர் நியோமேக்ஸ் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் முதலீடு செய்தனர். இந்நிலையில் கூறியபடி பணத்தை முறையாக திருப்பித் தரவில்லை என்று ஏராளமானோர் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். ரூ. 5 ஆயிரம் கோடி வரை நியோமேக்ஸ் மோசடியில் ஈடுபட்ட தாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. மோசடிக் குற்றச்சாட்டில், ‘நியோ மேக்ஸ்’ நிறுவனத்திற்கு சொந்தமான கிளை 17 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப் பட்டதுடன், சொகுசுக் கார்கள், தங்கம், முக்கிய ஆவணங்கள் போன்றவை பறி முதல் செய்யப்பட்டன. மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 11 பேரை கைது செய்ததுடன், 92 பேருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பதைக் கண்டுபிடித்தனர். ரூ. 17.25 கோடி மதிப்பிலான 752 வங்கி பரிவர்த்தனை களையும் முடக்கினர். இந்நிலையில் மதுரை விராட்டிபத்து பகுதியை சேர்ந்த நியோமேக்ஸ் நிறு வனத்தின் தலைமை நிர்வாக இயக்கு நர்களில் ஒருவரான கமலக்கண்ணன், அவரது சகோதரரும் நியோமேக்ஸ் நிறு வன இயக்குநர்களில் ஒருவருமான சிங்காரவேலன், நடேஷ் பாபு மற்றும் மைக்கேல் செல்வி உள்ளிட்ட இயக்கு நர்களையும் பொருளாதாரக் குற்றப்பி ரிவு போலீசார் கைது செய்து உள்ளனர். எனினும், முக்கியப் பிரமுகரும் நியோமேக்ஸ் நிறுவனருமான வீரசக்தி, பாலசுப்ரமணியன் ஆகியோரைப் பிடிக்க தனிப்படையினர் தொடர் தேடுதலில் ஈடுபட்டு வந்த நிலையில், நியோமேக்ஸ் தலைமை இயக்கு நர் வீரசக்தி, நியோமேக்ஸ் துணைத் தலைவர் பாலசுப்பிரமணியத்தின் மகளும் இயக்குநருமான லாவண்யா ஆகிய இருவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் திருச்சியில் வைத்து கைது செய்துள்ளனர். இவர்களில், நியோமேக்ஸ் நிறு வனர் வீரசக்தி என்பவர் பாஜக பிரமுகர் என்பது தெரியவந்துள்ளது. கமல்ஹாச னின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டவர் என்றா லும், தேர்தலுக்குப் பிறகு வீரசக்தியை பாஜக தன்பக்கம் வளைத்துப் போட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. ரூ. 2 ஆயிரத்து 500 கோடி அள விற்கான ‘ஆருத்ரா’ நிதி மோசடி வழக்கில் பாஜக-வைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் சம்பந்தப் பட்டிருப்பது அம்பலமான நிலையில், தற்போது ரூ. 5 ஆயிரம் கோடி அள விற்கான நியோமேக்ஸ் மோசடியிலும் சூத்திரதாரி பாஜக-வைச் சேர்ந்த வர்தான் என்பது அம்பலமாகி அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.