states

முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

சென்னை,டிச.14- தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரு கிறது. அதில் முக்கியமாக மருத்து வத்துறையில் பல முன்னேற்றங்கள் இருக்கிறது. குறிப்பாக முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ்  மக்கள் பலரும் பயனடைந்து வருகின் றனர். அந்த வகையில் தற்போது சேலம்  மாவட்டம், எடப்பாடி அரசு மருத்துவ மனையில் இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நடப்பாண்டில் மட்டும் 65 பேருக்கு வெற்றிகரமாக முடித்து சாதனை படை த்துள்ளனர் அரசு மருத்துவர்கள். சேலம் மாவட்டம், எடப்பாடி அரசு மருத்துவமனையை கடந்த 2022 ஆம்  ஆண்டு தமிழ்நாடு அரசு தரம் உயர்த்தி யது. அதில் இருந்து அரசு மருத்து வர்கள் பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்து வருகின்றனர். இதன் மூலம் மக்களுக்கு பெரும் பயன் இருக்கி றது. இந்த சூழலில் தனியார் மருத்துவ மனைக்கு நிகராக எடப்பாடி அரசு மருத்துவமனையில் நடப்பு ஆண்டில் மட்டும் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் 65 நபர்களுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் முறையாக ஒரு வருக்கு இடுப்பு எலும்பு மாற்று அறுவை  சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொண்டு ள்ளனர்.

தற்போது கோமதி என்கிற பெண்ணுக்கு இரண்டு கால்களுக்கும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து, முனியன் என்பவருக்கு முதன் முதலாக இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சையும் செய்து சாதனை புரிந்த மைக்கு அரசு மருத்துவர்களுக்கு பாரா ட்டுகள் குவிந்து வருகிறது. இந்த நிகழ்வு தொடர்பாக எடப்பாடி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கோகுல் கிருஷ்ணன் மற்றும் எழும்பு மருத்துவர் பாலாஜி ஆகியோர் கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் மூட்டு வலியால் அவதிப் பட்டு வந்த நோயாளிகளுக்கு தனி யார் மருத்துவமனைக்கு நிகராக எடப்பாடி அரசு மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து ள்ளதாகவும், எடப்பாடி மட்டுமல்லாமல் திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட பிற மாவட்டங்களிலிருந்து வருகை புரிந்த நோயாளிகள் உட்பட இந்த ஆண்டில் மட்டும் 65 நபர்களுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.