கவுகாத்தி, மே 18- அசாமில் மழையால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மக்களை மீட்கும் பணியில் ராணு வம் களம் இறங்கியுள்ளது. ரயில் பாதைகள் துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலமான அசாமில் பெய்துவரும் கனமழையால் 26 மாவட்டங்க ளில் நான்கு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள னர். கச்சார் மாவட்டத்தில் நிலைமை மிக வும் மோசமடைந்தது. மீட்பு நடவடிக்கை களுக்கு ராணுவம் வரவழைக்கப்பட்டது. ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்கள் படைகள் கச்சார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மீட்புப் பணிகளைத் தொடங்கி யுள்ளன. அசாம் மாநில பேரிடர் மேலா ண்மை ஆணையத்தின் அறிக்கையின்படி, கச்சார் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 96,697 பேர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,089 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக் கப்பட்டுள்ளன. 32,944.52 ஹெக்டேர் பயிர் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மாவட்ட நிர்வாகம் 89 நிவாரண முகாம்களை யும், 89 பொருட்கள் விநியோக மையங்க ளையும் அமைத்துள்ளது. இதுவரை இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் கச்சார் மாவட்டத்தில் மழையால் இறந்துள்ளனர். பிரம்மபுத்திரா நதியின் நீர்மட்டம் அபாய அளவை தாண்டி ஓடுகிறது. ஜதிங்கா-ஹ்ரங்கஜாவோ மற்றும் மஹூர்-ஃபிடிங்கில் ரயில் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. திமா ஹாசாவ் மாவட்டத்தில் உள்ள நியூ ஹாஃப்லாங் ரயில் நிலையம் வெள்ளத்தில் முற்றிலும் மூழ்கியுள்ளது.
பெங்களூருவில் மழை
இந்திய வானிலை மையத்தின் அறிக்கை யின்படி, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி கர்நாடக மாநிலம் பெங்க ளூரு கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் செவ்வாயன்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. திடீர் மழையால் கிரீன் லைன் மெட்ரோவின் மின்சாரம் நிறுத் தப்பட்டது. இதனால் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது. கனமழையால் நகரின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மக்கள் பெரும் அவதிக் குள்ளாயினர்.