states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

இந்தியாவில் ஆப்பிள் ஐபோனை டாடா நிறு வனம் தயாரிக்கும் என ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அறிவித்துள்ளார்.

பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான லாலுபிரசாத் யாதவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. லாலு வின் குடும்பத்திடமிருந்து ஸ்கிரிப்ட்களின் உரிமை கள் கோரப்பட்டுள்ளது. இந்தப் படத்தை பிரகாஷ் ஜா தயாரிக்கிறார். லாலுவின் மகன் தேஜஸ்வி பிர சாத், இந்த திரைப்படத்திற்கான நிதியுதவியை வழங்குகிறார். இந்தப் படத்தில் லாலுபிரசாத் யாதவ் நடிக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளி யாகியுள்ளது.

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு  லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் குற்றச்  சாட்டில் விசாரணைக்கு ஆஜராகும்படி  மக்களவை நெறிமுறைக் குழு சம்மன் அனுப்பிய  நிலையில், நேரில் ஆஜராக கூடுதல் அவ காசம் கேட்டு பதில் அனுப்பியுள்ளார் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா.

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள மெஹதிப்பட்டினத்தில் சிமன்லால்  சுரேஷ் குமார் டெக்ஸ்டைல்ஸ் என்ற நிறுவ னத்திற்கு சொந்தமான ரூ.18.5 லட்சம் டெபா சிட் பணத்தை, போலீஸ் அதிகாரிகள் எனக்  கூறி காரில் வந்து கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

2024இல் நடைபெறவுள்ள ஐபிஎல்  போட்டிங்க கான வீரர்கள் ஏலம்  வரும் டிசம்பர் 19 அன்று துபாயில் நடை பெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு  வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் காங்கி ரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்க ளுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வருதல், அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு இல வச லேப்டாப் வழங்குதல், பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை அமல்படுத்துதல், மாநிலத்தில் ’கோ தான்’ திட்டம் மூலம் பசுஞ்சாணத்தை கிலோ வுக்கு ரூ.2-க்கு வாங்கிக் கொள்ளுதல் மற்றும்  இயற்கை பேரிடர் சேதங்களுக்கு ரூ.15 லட்சம்  காப்பீடு அளித்தல் போன்ற 5 முக்கிய வாக்குறு திகள்  நிறைவேற்றப்படும் என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் வெள்ளியன்று அறிவித்தார்.

மாநில அரசுப் பணியாளர்கள் அரசு அனுமதியின்றி 2-ஆவது திருமணம் செய்து கொள்ள முடியாது என அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.