சென்னை,பிப்.26- திரைப்படங்கள் படபிடிக்கும் இடங்களில் ஏற்படும் விபத்தினால் லைட்மேன்கள் உயிரிழந்தால் அவர்க ளின் குடும்பத்திற்கு உதவ கார்ப்ரேட் ஃபண்ட் மூலம் ஏ.ஆர்.ரகுமான் நிதி யுதவி செய்யவுள்ளதாக இயக்கு நர் ஆர்.கே.செல்வமணி தெரி வித்துள்ளார். வடபழனியிலுள்ள தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன அலுவலகத்தில் பெப்சி தலைவரும், இயக்குநருமான ஆர்.கே செல்வமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ் திரைப்பட துறையில் எங்களது கடைநிலை ஊழியர்கள் 1000 ரூபாய் சம்பளத்தை தொடுவதற்கு ஏறக் குறைய 100 ஆண்டுகள் ஆகிறது. இது தான் தற்போதைய நிலையாக இருக்கி றது. திரைப்பட துறையில் அடிக் கடி விபத்துகள் ஏற்படுகிறது. சில பேர் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழக்கின்றனர். பெரிய நடிகர்களின் படங்களில் தொழிலாளிகள் இறந்து விட்டால் அவர்கள் குடும்பத்துக்கு உதவி கிடைக்கிறது. ஆனால் சிறிய தயாரிப்பாளர்கள் படங்களில் விபத்து நடந்தாலோ, மரணம் ஏற்பட்டாலோ உதவமுடி யாத நிலையில் தயாரிப்பாளர்கள் இரு க்கிறார்கள். எனவே மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு ஏ. ஆர்.ரகுமான் ஸ்டுடியோவில் விபத்து ஏற்பட்டு லைட் மேன் இறந்து விட்டார். இதையடுத்து லைட் மேன் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் பணிபுரியும் இடங்களில் விபத்து ஏற்பட்டு மரண மடைந்தால் அவர்களுக்கு உதவ கார்ப்பரேட் ஃபண்ட் ஏற்பாது செய்து தரு வதாக கூறினார். அதற்காக மார்ச் 19 அன்று ஒரு பிரத்யேக இசை நிகழ்ச்சி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்க இருக்கிறது. அந்த நிகழ்ச்சி மூலம் பெறப்படும் நிதியை திரைத் துறையிலுள்ள முக்கியமானவர்களை பொறுப்பாளராக வைத்து லைட் மேன் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் எந்த படத்தின் ஷூட்டிங்கில் விபத்து ஏற்பட் டால் அல்லது உயிரிழந்தால் நிதி ஆதாரத்தை பயன்படுத்தி கொள்ள லாம் என்றும் கூறினார். ஏ.ஆர்.ரகுமான் அந்த குடும்பத் துக்கு செய்ய வேண்டியதை செய்து விட்டார். இருந்தாலும் இது போன்ற விபத்தில் பாதிக்கப்படும் எல்லோ ருக்கும் உதவ வேண்டும் என்று முன் வந்தது பாராட்டத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.