states

தீக்கதிர் விரைவு செய்திகள்

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு எதிராக மேல்முறையீடு!

தமிழ்நாட்டில், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை 23 இடங்களில் சுற்றுச்சுவருடன் கூடிய மைதா னத்திற்குள் நடத்திக் கொள்ளலாம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த  தீர்ப்பை எதிர்த்து ஆர்எஸ்எஸ் மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் மகா தேவன், முகம்மது சபீக் அமர்வு, தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது. மேலும், மூன்று தேதி களை தேர்வு செய்து காவல்துறையிடம் விண்ணப்பிக்குமாறு ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும், அவற்றில் ஒரு தேதியை தேர்வு செய்து அணிவகுப்பிற்கு அனுமதி அளிக்குமாறு காவல் துறைக்கும் உத்தரவிட்டது. இந்நிலையில், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. 

11 மாநிலங்களில் வருமான வரித்துறை சோதனை!

தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் மொத்தம் 64 இடங்களில் வருமான வரித்துறையினர் சோத னையில் ஈடுபட்டனர். இந்தியாவை மையமாக கொண்டு, உத்தரப் பிரதேசம், தில்லி, குஜராத்,  மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், ஜம்மு - காஷ்மீர், ஹரியானா, தமிழ்நாடு, உத்தர கண்ட் மற்றும் இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இயங்கி வரும் பன்னாட்டு நிறுவன  அலுவலகங்களில், நூற்றுக்கணக்கான வருமான வரித்துறை அதிகாரிகள், செவ்வாய்க்கிழமை யன்று ஒரேநேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

8 மாநிலங்களில் 70 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!

கேங்ஸ்டர் நெட்வொர்க் வழக்குகள் தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் உள்ள 70 இடங்க ளில் தேசிய புலனாய்வு முகமையினர் (NIA) செவ்வாய்க்கிழமையன்று சோதனையில் ஈடு பட்டனர். குஜராத்தின் காந்திதாமில் உள்ள கேங்ஸ்டர் பிஷ்னோயின் நெருங்கிய உதவியாளர் குல்விந்தர் இருக்கும் பகுதிகளிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். பஞ்சாப்பில் 30 இடங்களிலும், ஹரியானா, ராஜஸ்தான், தில்லி, சண்டிகர், உத்தரப் பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த சோதனை நடைபெற்று வருகின்றது.

பாஜகவை வீழ்த்துவதற்கான உணர்வு அதிகரித்து வருகிறது

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்கொள்வதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்ட முன்னணி யை உருவாக்க வேண்டும் என்ற உணர்வு அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு கட்சிக்கும் அதன் சொந்த பலம் உள்ளது. அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட பலத்தை கூட்டணிக்கு கொண்டு வரு கிறது. ஒவ்வொரு கட்சியும் அதன் மாநில அளவிலான பார்வையை விட்டுவிட்டு, அகில இந்திய பார்வையை கொண்டிருக்க வேண்டும். காங்கிரஸ் தலைவர்களும், சரத்பவார், நிதிஷ் குமார், சீத்தாராம் யெச்சூரி மற்றும் மு.க. ஸ்டாலின் போன்ற கூட்டணி கட்சி தலைவர்களும் புதிய கண்ணோட்டத்துடன் தேர்தலை அணுகினால் அனைத்து கட்சிகளையும் ஈர்க்க முடியும் என்று நம்புகிறேன்” என காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

விதை, உரம், மின்சாரம், வேலைவாய்ப்பு பற்றி மோடி பேசமாட்டார்

“இந்த பிப்ரவரி ஸ்பெஷலானது. பிரதமர் டவுசா செல்கிறார். ஒவைசி டோங்கிங்குப் போகி றார். ஏனென்றால் இது தேர்தல் ஆண்டு. இந்த இரண்டு தலைவர்களும் கடந்த நான்கு ஆண்டுகளாக எங்கே இருந்தார்கள்? ஆனால், தற்போது தேர்தல் நெருங்கி வருவதால், அவர்கள் உரை வழங்க, மதம் பற்றி பேச வருகிறார்கள். அவர்கள் மீண்டும் இந்து - முஸ்லிம், கோயில் - மசூதி, பாரத் - பாகிஸ்தான் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களுக்கு உரம், விதை,  மின்சாரம், வேலைவாய்ப்பு, சுகாதாரம் ஆகியவற்றுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. ராஜஸ்தா னில் தேர்தல் முடியும் நாளில் அவர்கள் காணாமல் போய் விடுவார்கள்” என்று ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதல்வரும், காங்கிரஸ் இளம் தலைவருமான சச்சின் பைலட் பேசியுள்ளார். 

வெளிநாட்டுப் பயணம்: ரூ.82,000 கோடி செலவிட்ட இந்தியர்கள்

நடப்பு 2022-23 நிதியாண்டின் ஏப்ரல் - டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் இந்தியர்கள் வெளி நாட்டுப் பயணங்களில் 1000 கோடி டாலரை - அதாவது சுமார் 82 ஆயிரம் கோடி ரூபாயை செல விட்டுள்ளனர். இது, முந்தைய ஆண்டுகளில் செலவிட்டதை விட அதிகம். மேலும், கல்வி,  உறவினர்களைப் பராமரித்தல், பரிசுகள் மற்றும் முதலீடுகள் ஆகியவற்றுக்கான செலவினங்களை யும் சேர்க்கும் பட்சத்தில் நடப்பு நிதியாண்டில் இந்தியர்கள் 1,935 கோடி டாலரை ஒட்டுமொத்தமாக செலவு செய்துள்ளனர். ரிசர்வ் வங்கி வெளியிட்ட தரவுகளில் இதுதொடர்பான புள்ளிவிவரங்கள் இடம் பெற்றுள்ளன.

ஷில்லாங்கில் மட்டுமே மோடி பிரச்சாரம்!

மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, பிஏ சங்மா விளையாட்டரங்கில் பிரத மர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தை நடத்த பாஜக திட்டமிட்டிருந்தது. ஆனால், விளையாட்டு அரங்கின் கட்டுமானப் பணிகள் 90 சதவிகிதம் மட்டுமே முடிந்திருப்ப தால், அங்கு கூட்டங்கள் நடத்த அனுமதி தரமுடியாது என மாநில முதல்வர் கான்ராட் சங்மா கூறி விட்டார். இதையடுத்து,  மாற்று இடத்தில் பிரச்சார கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ள பாஜக  நிர்வாகிகள் பிப்ரவரி 24 அன்று பிரதமர் மோடி பேசுவதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளனர்.

பாஜகவினர் மாட்டிறைச்சி சாப்பிட எந்தத் தடையும் இல்லை

பாஜகவில் உள்ளவர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு எந்த தடையும் இல்லை. நானே  மாட்டிறைச்சி சாப்பிடுகிறேன். அதில் கட்சிக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இது நமது பழக்கம் மற்றும் கலாச்சாரம். நாம் நமது சொந்த உணவுப் பழக்கத்தை பின்பற்றுகிறோம். எனவே,  மேகாலயா மாநிலத்தில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. இங்குள்ள 60 தொகுதிகளிலும் பாஜக  வேட்பாளர்களை நிறுத்தும். இதில், குறைந்தபட்சம் 34 இடங்களில் வெற்றிபெறுவோம் என எதிர்  பார்க்கிறோம் என்று மேகாலயா பாஜக தலைவர் எர்னஸ்ட் மாவ்ரி நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

ஆன்லைன் ரம்மி மேல்முறையீட்டு  மனு விசாரணை ஒத்திவைப்பு

புதுதில்லி, பிப்.21-  ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு விசாரணையை நான்கு வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.  ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி  தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது.  இந்த சட்டத்தை  ரத்து செய்யக் கோரி ஆன்லைன் விளையாட்டு நிறு வனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு  தொடரப்பட்டது. அப்போது, ‘கடந்த 5 ஆண்டுகளில் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி சில மர ணங்கள் நிகழ்ந்ததால் இந்த விளையாட்டிற்குத் தடை  விதிக்கப்பட்டது,’ என தமிழ்நாடு அரசு சார்பில் தெரி விக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம், ‘போதுமான காரணங்களை விளக்கா மல் தடை சட்டம் இயற்றப்பட்டுள்ளது. உரிய முறைப்  படுத்தும் விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டு களுக்கு ஒட்டு மொத்தமாக தடை விதிக்க முடியாது’ என்று கூறி, ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிரான  தமிழ்நாடு அரசின் சட்டத்தை ரத்து செய்து கடந்த 2021  ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி உத்தரவிட்டது.  இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு புதனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ரேசன் கடையில் தரமற்ற அரிசியா? அதிகாரிகள் விளக்கம்

கிருஷ்ணகிரி,பிப்.21- கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே ஜக்கேரி ஊராட்சியிலுள்ள ஒரு நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு ரேசன் அரிசி வழங்கப்பட்டது. அதில் 5 கிலோ  முதல் 8 கிலோ வரை தரமற்ற அரிசி கலந்திருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். அந்த அரிசியை அடுப்பில் வைத்து வேக வைக்கும் போது பசை  போல் பொங்கி வருவதாகவும், இதனால் ஒரு சிலருக்கு உடல் உபாதை கள் ஏற்படுவதாகவும் அப்பகுதி பெண்கள் தெரிவித்தனர். ரேசன் கடையில் வழங்கப்பட்ட அரிசி தரமற்ற தாகவும் கலப்படம் இருந்ததாகவும் பொதுமக்கள் புகார் கூறினர். மேலும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். பிறகு, அங்கு வந்த தேன்கனிக் கோட்டை வட்ட வழங்கல் அதிகாரி அரிசியை பரிசோதனை மையத்திற்கு அனுப்பி ஆய்வு செய்யப்படும் என்று  கூறினார். தற்போது அவர் அளித்திருக் கும் விளக்கத்தில், “அது பிளாஸ்டிக் அரிசி அல்ல. அவை செறிவூட்டப்பட்ட அரிசி. அந்த அரிசியில் இரும்பு சத்து,  பி-12 மற்றும் போலிக ஆசிட் உள்ளடக் கிய சத்துக்கள் அதிகம் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு எவ்வித  பாதிப்பும் ஏற்படாது. இந்த செறிவூட்டப் பட்ட அரிசியை பள்ளி மாணவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

சாலைகளில் திரியும் மாடு கொம்பில் சிவப்பு வண்ணம்:  அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை,பிப்.21- நெடுஞ்சாலைகளில் திரியும் கால்நடைகளால் ஏற்படும் விபத்துக் களை தடுக்க, அவற்றின் கொம்பில்  சிவப்பு வண்ணம் பூச உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் சென்னையில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த  மனுவில், “நகர்மயமாக்கல், மேய்ச்சல்  நிலங்கள் ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களால், கால்நடைகள் உணவுக்காக தேசிய - மாநில நெடுஞ் சாலைகளில் சுற்றித் திரிகின்றன. தமிழ் நாட்டில் சாலைகளில் சுற்றித் திரியும், பசு, எருமை மற்றும் நாய்களால்  ஏற்பட்ட விபத்துகளால் கடந்த ஐந்து ஆண்டுகளில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளும் பலியா கியுள்ளனர். இரவு நேரங்களில் சாலைகளில் திரியும் கால்நடைகள் தெளிவாக பார்க்க முடியாத காரணத்தால் அதிக விபத்துகள் நடக்கிறது. இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க ஆந்திரா, தெலுங்கானாவில், நாய்கள், கால் நடைகளுக்கு பிரதிபலிக்கும் டேப்கள் பொருத்தப்படுகிறது. தமிழ்நாட்டு சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளுக்கு சிவப்பு நிற  பட்டைகளை பொருத்தும்படியும், கொம்புகளில் சிவப்பு நிற பிரதி பலிப்பு பெயின்ட் பூச உரிமையாளர்க ளுக்கு உத்தரவிட வேண்டும். சாலைகளில் திரியும் விலங்குகளின் உரிமையாளருக்கு அதிக அபராதம் விதிக்க வேண்டும்” என்று அந்த மனு வில் கூறியுள்ளார். இந்த மனுவை விசாரித்த பொறுப்பு  தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, மத்திய சாலைப் போக்குவரத்து துறை, தமி ழக உள்துறை, நெடுஞ்சாலை துறை, நகராட்சி நிர்வாக துறைகள் நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்:  தடை விதிக்கக் கோரிய  மனு தள்ளுபடி

சென்னை,பிப்.21-  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர் தலுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை  தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின்  தலைவர் ஈஸ்வரன் தாக்கல் செய்த  மனுவில், ‘தேர்தலின்போது வாக்காளர்க ளுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு சட்டங்கள் உள்ளன. ஆனாலும்  வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பது தொடர்கிறது. இதனை தடுக்க தேர்தல்  ஆணையம் போதுமான நடவடிக்கைகளை எடுப்பது இல்லை. ஒவ்வொரு தேர்தலின் போதும், பணம் கொடுத்து வாக்கு வாங்கப்படுகிறது. இது போன்ற தவறிழைப்பவர்கள் தண்டிக்கப் படுவதில்லை. எனவே, தேர்தல் முறைகேடு கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலை மையில், வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரி கள், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் கொண்ட குழு அமைக்க வேண்டும். அதுவரை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும்’ என்று மனுவில் கோரியிருந்தார். இந்த மனுவை செவ்வாயன்று (பிப்.21)  விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, ஏற்கனவே மற்றொரு வழக்கில் இது சம்பந்தமான நிவாரணங்கள் வழங்கப் பட்டுள்ளதாக கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தாய்மொழி காப்போம்: முதலமைச்சர்

சென்னை,பிப்.21- சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-  தாய்மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம் - உயிர் கொடுத்து உயிர் காத்த இனம், நம்  தமிழினம்! தொன்மையும் காலத்துக் கேற்ப தகவமைத்துக் கொள்ளும் திறனும் ஒருங்கே பெற்ற நம் தாய்மொழியாம் தமிழைக் காப்போம்! தமிழின் உயர்வை நானிலமும் நவிலச் செய்வோம்! இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

மு.க.ஸ்டாலின் 70 ஆவது பிறந்த நாள் விழா: தேசிய தலைவர்கள் பங்கேற்பு

சென்னை,பிப்.21- தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலி னின் 70வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் தேசிய தலை வர்கள் கலந்து கொள்ள உள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் தெரிவித்துள்ளார். இது  குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:- திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மார்ச் 1 அன்று தனது எழுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கி றார்கள். ஆட்சிக்கு வந்த 20 மாத  காலத்துக்குள் ஏராளமான சாதனை களைசெய்துள்ளார். அவரது பிறந்த நாளை எழுச்சியுடனும் கொண்டாட கழகம் முடிவெடுத்துள்ளது. மார்ச் 1 அன்று மாலை 5 மணிக்கு  சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.  மைதானத்தில் நடைபெறும் விழா வுக்கு நான் தலைமை வகிக்கிறேன். கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு வரவேற்கிறார். மல்லிகார்ஜூன  கார்கே (காங்கிரஸ்), பரூக் அப்துல்லா (தேசிய மாநாட்டு கட்சி),  அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாதி), தேஜஸ்வி யாதவ்(ராஷ்ட்ரீய ஜனதா தளம்) உள்ளிட்ட பலரும் வருகை தந்து வாழ்த்துரை வழங்கு கின்றனர். இவ்வாறு அவர்  தெரிவித்திருக்கிறார்.

துருக்கியில் மீண்டும்  இரண்டு நிலநடுக்கங்கள்

அங்காரா, பிப்.21- துருக்கியின் தெற்குப் பகுதி மற்றும் சிரியாவின் எல்லையில் 6.4 மற்றும் 5.8 ரிக்டர் அளவில் மேலும் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன. பத்து நாட்களுக்கு முன்பாக ஏற்பட்ட  நிலநடுக்கங்களால் துருக்கி மற்றும் சிரியா வில் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்து சிகிச்சையில் உள்ளனர். மேலும் லட்சக்கணக்கான குடும்பங்கள் தங்கள் இருப்பிடங்களை இழந்து நிற்கிறார்கள். இந்நிலையில் மேலும் இரு நிலநடுக்கங்கள் துருக்கியை உலுக்கி  எடுத்திருக்கிறது. துருக்கியின் தெற்கில் உள்ள ஹடாய் மாகாணத்தில் இது நிகழ்ந்திருக்கிறது. இந்த இரண்டு நில நடுக்கங்களும் அண்டை நாடுகளான சிரியா, எகிப்து, லெபனான், இராக், பாலஸ்தீனம் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளிலும் உணர முடிந்திருக்கிறது. நில நடுக்கத்தை நேரில் உணர்ந்த சிலர் கூறுகையில், “கட்டிடங்கள்  சேதமடைந்ததை நாங்கள் பார்த்தோம். ஆனால் மக்கள் உயிரிழப்பு பற்றி எங்களுக்குத் தெரியவில்லை” என்று தெரிவித்தனர். ஆனால், ஏற்கனவே பாதிக்கப்பட்டதில் இருந்து மீளாத நிலையில், இந்தப் புதிய நிலநடுக்கங்கள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி விட்டன. இருப்பிடங்களை இழந்து, கொட்டகை களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்கள் மீண்டும் பாதிப்புக்கு ஆளாகியிருக் கிறார்கள். தனது ஏழு வயது சிறுவனைக் கையில் பிடித்துக் கொண்டு, “என் கால் களுக்குக் கீழிருந்த பூமி இரண்டாகப் பிளக்கிறதோ என்ற அச்சத்துடன் நாங்கள் இருந்தோம்” என்று ஒரு பெண் அரற்றி னார். உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என்று அரசுத்தரப்பில் வெளியாகியுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.