states

5 காவல் அதிகாரிகள், காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கம் அறிவிப்பு

சென்னை, ஜூன் 25- சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு தினத்தை யொட்டி 5 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு முதல்வர் பதக்கம் அறி விக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மே 9 அன்று சட்டப் பேரவையில், மதுவிலக்கு மற்றும் ஆய த்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை யின் போது “சமூகத்தில் போதைப் பொருளை ஒழிப்பதற்காக கடுமை யாகவும், உண்மையாகவும் உழைக் கும் அதிகாரிகள் மற்றும் காவலர் களை ஊக்குவிப்பதற்கென முதல்வர் பதக்கம் புதிதாக வழங்கப்படும் என அறிவித்தார்.  அதனைத் தொடர்ந்து 3.8.2022 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக காவல் துறை தலைமை இயக்குநரின் பரிந் துரைக்கேற்ப 5 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு முதல்வர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் சுதந்திர தின விழாவில் வழங் கப்படும். இதன்படி, காவல் கண்காணிப் பாளர்கள் வெ.பத்ரிநாராயணன் (கோவை), டோங்கரே பிரவின் உமேஷ்  (தேனி), காவல் துணை கண்காணிப் பாளர் மா.குணசேகரன் (இருப்பு பாதை, சேலம் உட்கோட்டம்), ஆய்வாளர் சு.முருகன், முதல் நிலை காவலர் இரா.குமார் (நாமக்கல் மாவட்டம்) ஆகிய 5 பேருக்கும் முதல்வர் பதக்கம் அறி விக்கப்பட்டுள்ளது.  மேலும், போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தலை ஒழிப்பதில் காவல்துறை தென் மண்டல தலைவர் அஸ்ரா கர்க்கின் (மதுரை) பணியை அங்கீ கரித்து அவருக்கு ரொக்கப் பரிசு இல்லா மல், ‘சிறப்பு பதக்கம்’தனி நேர்வாக வழங்கப்படுகிறது.