states

img

10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிப்பு பெரம்பலூர், குமரி முதலிடம்

சென்னை, ஜூன் 20- தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 12  ஆம்வகுப்பு தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடமும் 10 ஆம்வகுப்பு தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் முதலிட மும் பெற்றுள்ளது. இந்த இரண்டுதேர்வுகளி லும் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. சென்னையில் திங்களன்று(ஜூன் 20) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு முடிவு களை வெளியிட்டார். பின்னர் செய்தியா ளர்களிடம் பேசிய அவர் 12-ம் வகுப்பு  தேர்வெழுதிய மாணவர்களின் எண் ணிக்கை 8 லட்சத்து 6 ஆயிரத்து 277 பேர். இதில் மாணவியர் 4 லட்சத்து 21 ஆயி ரத்து 622, மாணவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 84 ஆயிரத்து 655. தேர்ச்சிப் பெற்றவர்கள் 7 லட்சத்து 55 ஆயிரத்து 998,  கிட்டத்தட்ட 93.76 விழுக்காடு தேர்ச்சிப் பெற்றுள்ளனர் என்றார்.

இதில் மாணவிகள், 4 லட்சத்து 6 ஆயி ரத்து 105 - 96.32 விழுக்காடு . மாணவர்கள் 3 லட்சத்து 49 ஆயிரத்து 893 - 90.96 விழுக்காடு. மாணவர்களைவிட மாணவிகள் 5.36 விழுக்காடு அதிகமாக தேர்ச்சிப் பெற்றுள்ள னர். வணிகவியலில் 4,634 பேர் சதம்: இயற்  பியல் பாடத்தில் 634 பேரும், வேதியியல் பாடத்தில் 1500 பேரும், உயிரியல் பாடத்தில்  1541 பேரும், கணிதப் பாடத்தில் 1858 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தாவரவியல் பாடத்தில் 47 பேரும், விலங்கியல் பாடத்தில் 22 பேரும், கணினி  அறிவியல் பாடத்தில் 3827 பேரும், வணிக வியல் பாடத்தில் அதிகபட்சமாக 4634  பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். மேலும், கணக்குப் பதி வியல் பாடத்தில் 4540 பேரும், பொருளியல்  பாடத்தில் 1146 பேரும், கணினிப் பயன்பாடு கள் பாடத்தில் 2816 பேரும், வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்தில் 1151 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் கள் பெற்றுள்ளனர்.

அரசுப்பள்ளிகளில்  86.06 விழுக்காடு தேர்ச்சி 

12ஆம் வகுப்பு தேர்வில் அரசுப் பள்ளி களின் தேர்ச்சி விகிதம் 89.06 விழுக்காடா கும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் 94.87 விழுக்காடும், தனியார் பள்ளிகளில் 99.15 விழுக்காடும் தேர்ச்சி கிடைத்துள்ளது. அரசுப்பள்ளிகளில் 246 பள்ளிகளில் 100 விழுக்காடு தேர்ச்சி கிடைத்துள்ளது என் றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரி வித்தார். 

 மாவட்ட வாரியாக விவரங்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் 97.95 விழுக்  காடு பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்  மூலம் பெரம்பலூர் மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது. 97.27 விழுக்காட்டு டன் விருதுநகர் 2வது இடத்தையும், 97.02  விழுக்காட்டுடன் ராமநாதபுரம் 3வது இடத்தையும் பிடித்துள்ளது. 86.69 விழுக்  காட்டுடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. மேலும், பல்வேறு  துறைகளின் கீழ் செயல்படும் பள்ளிகளில்  ஆதிராவிடர் நலப்பள்ளிகள் 82.21 விழுக் காடு தேர்ச்சி பெற்றுள்ள தகவலையும் அமைச்சர் தெரிவித்தார்.

 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் திங்கட்கிழமை ( ஜூன் 20) வெளியிடப்பட்டன. இதில் தேர்வெழுதிய 9 லட்சத்து 12 ஆயிரத்து 62 பேரில், 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 பேர் தேர்ச்சி பெற்றனர். குறிப்பாக, 6,016 மாற்றுத் திறன்  மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில், 5,424 பேர் தேர்ச்சி பெற்றனர். சிறைக் கைதி களில் தேர்வு எழுதிய 242 பேரில், 133 பேர்  தேர்ச்சி பெற்றனர்.

42ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை

குறிப்பாக, தேர்வு எழுத தகுதி பெற்று  இருந்தவர்களில் 42,519 பேர் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. இந்த எண் ணிக்கை, கடந்த 2019-ம் ஆண்டை விட 22,000 அதிகம் ஆகும். 2019-ம் ஆண்டில் 20,053 பேர் தேர்வு எழுத வரவில்லை என்று குறிப்பிடத்தக்கது. 

மாவட்டம் வாரியாக 

மாவட்ட வாரியாக பார்த்தால் 10-ம் வகுப்பு தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 97.22 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் கன்னியாகுமரி மாவட்டம்  முதல் இடத்தை பிடித்துள்ளது. 97.15 விழுக்காட்டுடன் பெரம்பலூர் 2-வது இடத்  தையும், 95.96 விழுக்காட்டுடன் விருதுநகர் 3வது இடத்தையும் பிடித்துள்ளது. 79.87 விழுக்காட்டுடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. 

பெஃபி நடத்தும்பள்ளி 100விழுக்காடு தேர்ச்சி

 தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை குறிச்சி சிற்றூரில் இந்தியன் வங்கி ஊழி யர் அசோசியேஷன் (தமிழ்நாடு) சங்கம் தனது கல்வி அறக்கட்டளை மூலம் தாய்  மொழி வழி கல்வி முறையில் வகுப்புகளை  நடத்தி வருகிறது. இந்த பள்ளிக்கு 10 ஆம்  வகுப்பு தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி கிடைத்துள்ளது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு ஹோம் ஒர்க் கிடையாது. ரேங்க் கிடை யாது. வித்தியாசமான இந்த உயர்நிலைப் பள்ளி 20 ஆண்டுகளை நிறைவு செய் துள்ளது. மாணவிகளில் பகவதி 500க்கு 453,  சுபஸ்ரீ 435, நித்திய கலா 429 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 

12 ஆம் வகுப்பு தேர்வு மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்

ஆதிதிராவிடர் பள்ளிகள் - 82.21 விழுக்  காடு; ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் - 99.11 விழுக்காடு; சிபிஎஸ், ஐசிஎஸ்சி மற்றும்  மாநில பாடத் திட்ட பள்ளிகள் - 99.54 விழுக்காடு; மாநகராட்சிப் பள்ளிகள் - 89.81 விழுக்காடு; வனத்துறை பள்ளிகள் - 93.25  விழுக்காடு; முழு அரசு உதவி பெறும் பள்ளி கள் - 94.87 விழுக்காடு; அரசுப் பள்ளிகள் - 89.06 விழுக்காடு; இந்து சமய அறநிலை யத் துறை பள்ளிகள் - 94.55 விழுக்காடு; கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் - 94.52 விழுக்காடு; நகராட்சிப் பள்ளிகள் - 90.30 விழு ககாடு; ஓரி யண்டல் பள்ளிகள் - 99.35 விழுக்காடு; பகுதி அரசு உதவி பெறும் பள்ளிகள் - 96.36 விழுக்காடு; ரயில்வே பள்ளிகள் - 94.12 விழுக்காடு; சுயநிதி மெட்ரிக் பள்ளிகள் - 99.15 விழுக்காடு; பள்ளிக் கல்வி துறைக்கு கீழ் உள்ள சுயநிதி பள்ளிகள் - 98.60 விழுக்காடு; சமூக நலத்துறை பள்ளிகள் - 92.67 விழுக்காடு; பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் - 86.89 விழுக்காடு.

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள், பள்ளிகள் தேர்ச்சி விழுக்காடு

ஆதிதிராவிடர் பள்ளிகள் 78.11 விழுக்காடு; ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் 97.93;  கண்டோன்மென்ட் பள்ளிகள் 78.95 விழுக்காடு; மாநக ராட்சி பள்ளிகள் 81.49 விழுக்காடு; வனத்துறை பள்ளி கள் 95.21 விழுக்காடு; முழு அரசு உதவி பெறும் பள்ளிகள் 89.01 விழுக்காடு; அரசுப் பள்ளிகள் 85.25 விழுக்காடு; இந்து சமய அறநிலையத் துறை பள்ளிகள் 89.43 விழுக்காடு; கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் 89.20 விழுக்காடு; நகராட்சிப் பள்ளிகள் 80.85 விழுக்காடு; பகுதி அரசு உதவி பெறும் பள்ளிகள் 90.60 விழுக்காடு; ரயில்வே பள்ளிகள் 100 விழுக்காடு; சுயநிதி மெட்ரிக் பள்ளிகள் 98.31 விழுக்காடு; பள்ளிக் கல்வி துறைக்கு கீழ் உள்ள பள்ளிகள் 96.53 விழுக்காடு; சமூகப் பாதுகாப்பு துறை பள்ளிகள் 14.29 விழுக்காடு; சமூக  நலத்துறை பள்ளிகள் 91.76 விழுக்காடு; பழங்குடி யினர் நலத்துறை பள்ளிகள் 78.37 விழுக்காடு.  தேர்ச்சியும் முதலிடமும் பெற்றுள்ள மாணவ - மாணவியருக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.