states

அறிமுகமாகிறது ஆட்டோ செயலி

சென்னை, செப். 20 - ஆட்டோக்களுக்கான செயலியை ஓரிரு வாரங்களில் தமிழகஅரசு அறிமுகப்படுத்த உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றி  அமைக்க சென்னை உயர்நீதமன்றம் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் உத்தர விட்டது. அதனை அரசு நிறைவேற்ற வில்லை. இதனைதொடர்ந்து ஆட்டோ தொழிலாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி னர். தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் சார்பில் ஆக.25 அன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய சென்னை மாவட்டம் சார்பில் தலைமை செயலகம் நோக்கி பேரணி நடத்தி,  உள்துறை செயலாளரிடம் மனு அளித்து பேசினர்.இதன்பிறகு போக்கு வரத்து ஆணையர் சண்முக சுந்தரம் செப்.14 அன்று அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பை அழைத்து பேசினார். இந்நிலையில், செப்.19 அன்று உயர்நீதி மன்றத்தில் நடைபெற்ற வழக்கில், 90 நாட்களில் மீட்டர் கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என்று அரசு உறுதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் புதனன்று (செப்.20) சம்மேளன செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம், சென்னை மாவட்ட நிர் வாகிகள் இ.உமாபதி, மனோகரன் (தென் சென்னை), ஆர்.கபாலி, சீனிவாசன், (மத்திய சென்னை), வி.ஜெயகோபால் (வட சென்னை) ஆகியோரை அழைத்து பேசி னார். இதன்பின் செய்தியாளர்களிடம் சம்மேளன செயல்தலைவர் எஸ்.பால சுப்பிரமணியம் கூறியதாவது: ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்து பேசினோம். அதற்கு பதிலளித்த ஆணையர், இரண்டு  வாரங்களில் ஆட்டோ செயலி செயல்பாட் டிற்கு கொண்டு வர உள்ளோம். மீட்டர் கட்டணத்தை  12 வாரத்திற்கு உள்ளாகவே அறிவிக்க உள்ளோம். திருத்தப்பட்ட மீட்டர்  கட்டணம் பொருந்தும் வகையில் செயலி செயல்படும். ஓலா, உபேர் மற்றும் இரு சக்கர வாகன பைக் டாக்சியை தடை  செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இது தொடர்பாக தலைமை செயலகத் தில், தலைமை செயலாளர், உள்துறை செய லாளர், போக்குவரத்து துறை அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் நடக்கும். ஆட்டோ மீட்டர் கட்டணம் இறுதிப் படுத்தப்பட்டு விரைவில் முதலமைச்சர் அறி விப்பார் என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.