சென்னை, ஜூன் 15- திமுக பொருளாளரும் மக்களவை உறுப்பினருமான டி.ஆர் பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் ஆஜராக வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி பத்திரிகையா ளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். அதில், திமுக அமைச்சர்கள் மற்றும் தலைவர்களின் ஊழல் பட்டியலை வெளியிடப்போகிறேன் என்றார். ஆனால், ‘திமுக பைல்ஸ்’ என்ற பெயரில் திமுக தலைவரும் முதலமைச் சருமான மு.க. ஸ்டாலின் அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களின் சொத்துப்பட்டியலை (வேட்பாளர் பட்டியலில் இணைத் திருந்ததை) வெளியிட்டார். இந்த விவ காரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதில் திமுக பொருளாளரான டி.ஆர் பாலுவின் சொத்துப்பட்டியலையும் அவர் வெளியிட்டிருந்தார்.
இதனையடுத்து, சொத்துப்பட்டி யலை அண்ணாமலை வெளியிட்டதை தொடர்ந்து, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து அவர் தாக்கல் செய்த மனு வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில், அந்த மனுவில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்க்கையில் ஈடு பட்டு வரும் தனக்கு எதிராக எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறு கருத்துக்களை அண்ணா மலை தெரிவித்துள்ளதாக குறிப்பிட் டுள்ளார். 10 ஆயிரத்து 841 கோடி ரூபாய் மதிப்பிலான 21 நிறுவனங்கள் தனக்கு சொந்தமானவை என அண்ணாமலை கூறியது தவறானது என்றும் அவதூறா னது என்றும் மனுவில் தெரிவித் துள்ளார். எந்தவித அடிப்படை ஆதாரம் இல்லாமல் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ள அண்ணாமலையை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். அண்ணாமலைக்கு சம்மன் டி.ஆர்.பாலு தொடர்ந்திருந்த அவ தூறு வழக்கு வியாழனன்று (ஜூன் 15) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணா மலை, ஜூலை 14 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளது. இது குறித்த சம்மனை அண்ணாமலைக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுப்பியுள்ளது.