திருத்தணி,செப்.5- திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயி லில் 10 ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்த வெள்ளி தேருக்குப் பதிலாக புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, ஆர். காந்தி ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர் களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “சனாதனமும் இந்து மதமும் வாழைப்பழம் போன்றது. வாழைப்பழம் என்பது இந்து மதம் என்றால் சனாதனம் வாழைப்பழத்தின் மீது உள்ள தோல். தோலை நீக்கி தான் பழத்தை சாப்பிட முடியும். அதேபோல் சனாதனத் தில் தேவையில்லாத பகுதி களை எதிர்ப்பது எங்கள் கொள்கை. அதை அழிக்க வேண்டும் என்றுதான் நாங்கள் சொல்கிறோம். ஆனால் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்தை பாஜகவினர் திரித்துப் பேசி வருகின்றனர். சனாதனத்திலுள்ள கோட்பாடுகளை தான் நாங்கள் ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறோமே தவிர, சனாதனத்தையே அழிக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. பாஜக தலைவர் அண்ணா மலையின் பாதயாத்திரை மக்கள் மத்தியில் எடுபடாமல் போய்விடும். இதை திசை திருப்புவதற்காக ஒன்றுக்கும் உதவாத பொய் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர் என்றார்.