states

ஆளுநரின் தனிச் செயலாளரா அண்ணாமலை? - கே.பாலகிருஷ்ணன் கேள்வி

தர்மபுரி, ஜூலை 11- ஆளுநர் ரவியின் தனிச் செயலாளரா பாஜக அண்ணாமலை என்று கே.பால கிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். தர்மபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது: தமிழ்நாடு ஆளுநர் தான் ஏற்றுக் கொண்ட அரசியல் சாசனத்திற்கு மாறாக, ஆர்எஸ்எஸ்-சின் பிரதிநிதியாக எதிர்க் கட்சி தலைவர் போன்று செயல்படுகிறார் என தமிழ்நாடு முதலமைச்சர் குடியரசு தலைவருக்கு  கடிதம் எழுதியுள்ளார்.  ஆளுநரைக் கேள்விகேட்க முதல்வ ருக்கு அதிகாரம் உண்டு. ஆனால் ஆளு நரைக் கேள்வி கேட்டால் அண்ணாமலை முந்திக் கொண்டு பதில் சொல்கிறார். அண்ணாமலை ஆளுநரின் தனிச் செய லாளர் போல் செயல்படுகிறார். அண்ணா மலையின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை சீர்குலைப்பவர்களாக பாஜகவும், ஆர்எஸ்எஸ் நபர்களும் செயல்படுகின்றனர். பாஜகவில் உள்ளவர்களே அதிக அளவில் ஊழல், மோசடி, முறைகேடு, பாலியல் குற்ற வழக்குகளில் கைதாகின்றனர். இதனைத் தடுக்க அண்ணாமலைக்கு வழியில்லை; ஆனால் ஆளுநருக்கு ஆதர வாக அறிக்கைவிட வரிந்து கட்டிவருகிறார்.

கர்நாடகம் கைவிட வேண்டும்

காவிரி நீர் பிரச்சனையில் 50 ஆண்டு காலம் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. பிறகு இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்பிறகு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து அங்கேயும் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போதெல்லாம் மேகதாட்டு அணை கட்டுவது குறித்தோ பெங்களூருக்கு குடிநீர் பிரச்சனை குறித்தோ சொல்லவில்லை. எந்த சட்ட உரிமையும் இல்லாமல் கர்நாடக அரசு மேகதாட்டு அணை கட்ட முயற்சி செய்து வருகிறது. இதில் ஒரு மோதல் போக்கு நடக்க  ஒன்றிய அரசு துணைபோகக்கூடாது. கர்நாடக அரசு மேகதாட்டு அணை கட்டு வதை கைவிடவேண்டும்.

மகளிர் உரிமைத் தொகை

தமிழக அரசு தேர்தலின் போது அளித்த  வாக்குறுதியான பெண்களுக்கு உரிமை  தொகை வழங்கப்படும் என அறிவித் துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. சில வரையறைகளை அறி வித்துள்ளனர். இத்திட்ட விதிகள் குறித்து மக்களிடம் கருத்து கேட்டு, தேவைப்பட்டால் திருத்தம் செய்யவேண்டும். குறிப்பாக ஒரு  குடும்பம் 300 யூனிட் மின்சாரம் பயன்படுத்தி னால் இந்த சலுகை கிடைக்காது எனக் கூறப்பட்டுள்ளது. கோடை காலத்தில் 300 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தவேண்டிய சூழல் வருகிறது. இதனால் பெரும்பகுதி மக்க ளுக்கு சலுகை கிடைக்காது. ஏற்கனவே ஓய்வூதியம் பெறுபவர், முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள், விதவை உதவித்தொகை பெறுபவர்களுக்கு இத்திட்டத்தில் உதவித்தொகை கிடைக்காது  என்ற நிலை உள்ளது. ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் தான் இவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இவர்களுக்கு இல்லை என்றால் இருவரும் சமநிலைக்கு வந்து விடுகின்றனர். ஏற்கனவே உதவித்தொகை வாங்குபவர்களுக்கு அதை உயர்த்தி வழங்கவேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்.

கடந்த 400 நாட்களாக சர்வதேச மார்க்கெட்டில் கச்சா எண்ணெய் விலை உயர்வு இல்லை. ஆனால் இந்தியாவில் டீசல், பெட்ரோல், விலை மட்டும் குறைய வில்லை. இதுவும் இன்றைய காய்கறி விலை  உயர்வுக்கு காரணம். காய்கறி அதிக விளைச்சல் உள்ளபோது கொள்முதல் செய்து பற்றாக்குறை காலங்களில் அரசு விநியோகம் செய்யவேண்டும். தக்காளி விலை உயர்வுக்கு காரணம், அதிக விளைச்சல் உள்ளபோது குறைந்த விலை யால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்; இதனால் குறைந்த அளவே தக்காளி பயிரிடு கின்றனர். ஆகவே, தக்காளி விலை உயர்கிறது. இதனை சரிசெய்ய அரசே நேரடி யாக தலையிட வேண்டும். விளைச்சல்  அதிகமாக உள்ளபோது நியாயமான கட்டுப் படியான விலையில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யவேண்டும். அப்போது தான் அதிக அளவில் விவசாயிகள் பயிரிடு வார்கள். காய்கறிகள் கொள்முதல் செய்ய அரசே நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.