states

“தருமபுரம் ஆதீனத்திற்கு ஆதரவாக அண்ணாமலையும் ஆளுநரும் வாய் திறக்காமல் இருப்பது ஏன்?”

தருமபுரம் ஆதீனத்தை பணம் கேட்டு பாஜக  கும்பல் மிரட்டிய சம்பவம் மிகவும் கேவல மானது. இதில் பாஜகவினருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஆதீனத்திற்கு சென்ற ஆளுநர், அண்ணாமலை ஆகியோர் வாய் திறக்காமல் இருப்பது ஏன்? 198 பேர் கொண்ட பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஒரு வேட்பாளர் கூட அறிவிக்கவில்லையே! வேட்பாளர் யாரும் கிடைக்கவில்லை போலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜக தோல்வி என்பது எங்களுக்கு வெற்றி அல்ல; அவர்களுக்கு டெபாசிட் கூட கிடைக்கா மல் செய்வதே எங்களது இலக்கு. பாஜக தலைவர் அண்ணாமலை தனது பேச்சில் நாகரீகம் கடைப்பிடிக்க வேண்டும். அண்ணாமலை அரசியல் அனுபவமே இல்லாமல் பேசுகிறார். கூட்டணியை உருவாக்க முடியாத அண்ணாமலை, தென் மாவட்டங்களில் திமுக அணி வெற்றி பெறாது என்று கூறுவது பகல் கனவு.  மோடியை மட்டும் அடிக்கடி அழைத்து வந்து படம்  காட்டுகிறார் அண்ணாமலை. எத்தனை முறை மோடி யை அழைத்து வந்தாலும் தமிழகத்தில் பாஜக வெற்றி பெறாது. சமீபத்தில் பல்லடத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்திற்கு 60 கோடி ரூபாய் வரை செலவு செய்ததாக தகவல்கள் வருகின்றன. தமிழகத்தில் என்ன செய்தாலும் பாஜக வெற்றி பெற வாய்ப்பில்லை. நாடாளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி 2 இடத்தில் நின்றாலும் 40 தொகுதியும் எங்கள் தொகுதி தான்;  40 பேரும் எங்களது வேட்பாளர் என்றே பணியாற்றுவோம்.