அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் மாநிலத் தலைவர் பதவியை ராஜி னாமா செய்து விடுவதாக தமிழக பாஜக தலை வர் அண்ணாமலை அந்த கட்சியினரை மிரட்டி யிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பாஜகவுக்கும், அதிமுக வுக்கும் இடையே நீறு பூத்த நெருப்பாய் இருந்து வந்த மோதல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்கு பின்னர் பூகம்ப மாய் வெடித்துள்ளது. அறிக்கைகள், பேட்டி கள், உருவப் படங்கள் எரிப்பு, சுவரொட்டி என இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். இதற்கிடையே கிருஷ்ணகிரி வந்திருந்த பாஜக தேசியத் தலைவர் நட்டா அதிமுக தலை வர்களை விமர்சிக்க வேண்டாம் என்று பாஜக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். இதனால் அண்ணாமலையும், அவரது ஆதரவாளர் களும் எரிச்சல் அடைந்ததாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை தமிழகத்தில் கூட்டணி இல்லாமல் தனியாக இருந்தால் மட்டும் தான் பாஜகவை வளர்க்க முடியும் என்றும், பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேச பிரதமர் மோடியிடம் நேரம் கேட்டிருப்பதாகவும், அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் மாநிலத் தலைவர் பத வியை ராஜினாமா செய்து விட்டு சாதாரண தொண்டனாக கட்சிப் பணிகளை தொடர்வேன் என்றும் திடீரென அறிவித்தது இரு கட்சியினரி டையே புயலைக் கிளப்பியுள்ளது.
அக்கட்சியின் மூத்த நிர்வாகி நாராயணன் திருப்பதி இதுகுறித்து அண்ணாமலையிடம் மேடையிலேயே விளக்கம் கேட்டதாகக் கூறப் படுகிறது. இதனால் கூட்டத்தில் அண்ணா மலை ஆதரவாளர்களுக்கும் மற்ற நிர்வாகி களுக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது கட்சி யின் மையக் குழுவில் பேச வேண்டிய கருத்தை ஏன் இப்படி தொண்டர்கள் மத்தியில் பேசு கிறீர்கள் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அண்ணாமலையை நோக்கி கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படு கிறது. மேலும் தமிழ்நாடு பாஜக தலைவர் பதவி யில் இருந்து அண்ணாமலை நீக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியான நிலையில் மீசை யில் மண் ஒட்டவில்லை என்பது போல் தானா கவே ராஜினாமா செய்வது போல் கூறி யுள்ளார். இது ஒரு டிரெய்லர்தான் என அரசி யல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்நிலையில் ‘‘அண்ணாமலை பேசியது அவருடைய சொந்தக் கருத்து’’ என சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி அண்ணாமலைக்கே விபூதி அடித்துள்ளார். தமிழகத்தில் கூட்டணி குறித்து கட்சியின் தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என்றும் அண்ணாமலை போன்றவர்கள் அல்ல என்றும் நயினார் நாகேந்திரன் கறாராக சொல்லிவிட் டார். இதுவரை தமிழக வரலாற்றில் அனைத்துக் கட்சிகளும் கூட்டணி அமைத்துத்தான் போட்டி யிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். பாஜக தனித்து போட்டியிட்டால் நோட்டாவுடன்தான் போட்டியிட வேண்டும் என்பதை அவர் உணர்ந்துதான் இப்படி கூறியிருக்கிறார் போலும்.
இதற்கிடையே அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரும் ‘அதிமுக தலை மையில் தான் கூட்டணி’ என்று கூறி அண்ணா மலையின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை, அங்கேயே முகாமிட்டு தேர்தல் பணிகளை கவனிக்க வேண்டியுள்ள தாம். அந்த மாநிலத்தில் எடியூரப்பாவின் ஊழல், பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசின் மக்கள்விரோத செயல்பாடு களால் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியை தவிர்க்க போராடுகிறது பாஜக. இதனால் தமி ழக தலைவலியுடன் கர்நாடக தலைவலியும் சேர்ந்துள்ளதால் ‘‘ஆள விடுங்கடா சாமி’’ என்ற நிலைக்கு அண்ணாமலை தள்ளப்பட் டுள்ளதாக தெரிகிறது.
கர்நாடக தேர்தல் முடிந்தவுடன் மே மாதம் 10ஆம் தேதி ஒரு முக்கிய முடிவை அறி விக்க இருப்பதாக அண்ணாமலை மேற்படி அமைந்தகரை கூட்டத்தில் தெரிவித்ததாக பாஜக நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட் டணி அமைப்பதா? வேண்டாமா? என்பது தொடர்பாக அவரது முடிவு இருக்கக்கூடும். பெரும்பாலும், பழனிசாமி தலைமையிலான அதிமுகவை ஓரங்கட்டிவிட்டு, பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலாவை ஒருங்கி ணைத்து அதிமுக என்ற பெயரில் புதிய கூட்டணியை அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் குதிக்க அவர் திட்டமிட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். அண்ணாமலையின் ஒவ்வொரு உளற லுக்கும் அதிமுக இரண்டாம் மட்டத் தலை வர்கள் பதில் கொடுக்க தயாராகி விட்டனர் “தமிழகத்தில் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை ஏற்கும். யாருடன் கூட்டணி, யாருக்கு எத்தனை சீட்டு என்பதையும் அதி முகவே முடிவு செய்யும்” என்று முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்திருப்ப தால் பாஜகவினரின் முகம் சிவந்துள்ளது. மேலும் ஜெயக்குமாரும் அடிக்கடி பாஜக வினரை வம்புக்கு இழுத்து வருகிறார். இத னால் இரண்டு கட்சிகளுக்கும் இடையே புகைச் சல் மேலும் அதிகரித்துள்ளது.
- ராமு