புதுதில்லி, ஜுலை 27- உரிமைகள் மற்றும் சமூகப் பாது காப்பை உறுதி செய்யக் கோரி தில்லியில் அங்கன்வாடி ஊழியர்கள் நடத்தும் போராட்டம் தில்லி ஜந்தர் மந்தரில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அகில இந்திய அங்கன்வாடி ஊழி யர்கள் மற்றும் உதவியாளர்கள் கூட்ட மைப்பு தலைமையில் ஜந்தர்மந்தரில் நான்கு நாட்கள் நடைபெறும் காத் திருப்பு போராட்டத்தை (அதிகார மகா படாவ்) சிஐடியு பொதுச்செயலாளர் தபன் சென் செவ்வாயன்று (ஜுலை 26) துவக்கி வைத்தார். இந்த போரா ட்டத்தில் நாட்டின் பல்வேறு பகுதி களில் இருந்தும் ஆயிரக்கணக்கா னோர் கலந்து கொண்டனர். கட்டாய குறைந்தபட்ச ஊதியம் மற்றும் இதர சலுகைகள் வழங்கு தல், ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பை உறுதிசெய்தல், அங்கன் வாடிகளை தனியார்மயமாக்குவதை தடுத்தல், அரசு ஊழியர்களாக அங்கீ கரித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர், ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சரிடம் மனு அளிக்கப் படும். சிஐடியு தேசிய தலைவர் கே.ஹேமலதா, அகில இந்திய விவ சாயிகள் சங்க பொதுச்செயலர் ஹன்னன்முல்லா, எளமரம் கரீம் எம்.பி., கூட்டமைப்பு பொதுச் செயலர் ஏ.ஆர்.சிந்து, கூட்டமைப்பு கேரள மாநிலச் செயலர் பிரசன்னகுமாரி உள்ளிட்டோர் பேசினர்.
புதுதில்லி ஜந்தர்மந்தரில் அங்கன்வாடி ஊழியர்கள்-உதவியாளர்களின் 4 நாள் காத்திருப்பு போராட்டத்தை சிஐடியு பொதுச் செயலாளர் தபன் சென் துவக்கி வைத்தார்.