states

இந்திய ஜனநாயக மண்ணில் ஒளிசிந்தி வாழ்ந்த மங்காத நட்சத்திரம்

தோழர் சீத்தாராம் யெச்சூரி, சென் னையில் பிறந்து, நாடும் ஏடும் நானிலமும் போற்றும் படி வாழ்ந்து, தில்லிப் பட்டணத்தில் இறப்பை எய்தி இருக்கிறார். பழுத்த நாடாளுமன்ற ஜனநாயகவாதி - பண்பட்ட அறிஞர், எல்லாவிதமான தத்துவ விசாரணைகளை மிகுந்த வேட்கையோடும் நுண்ணிய முறையிலும் ஆய்வு நடத்திப் பழக்கப்பட்டவர்; மார்க்சியக் கொள்கைக் கோட் பாடுகளை உள்வாங்கி, அவற்றை இந்திய மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப, விளக்கிக் கூறுவதில் வல்லவராகத் திகழ்ந்தவர், பன் மொழி வித்தகர், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுடனும் மிக நெருக்கமாகப் பழகி, அவர்களில் ஒருவராகத் தன்னைக் காட்டி வாழ்வதில் மிகுந்த தேர்ச்சிப் பெற்ற வர். அவரது ஆங்கில உரைகள் மிகவும் தெளி வாக இருக்கும். மனதில் எழும் ஐயங்களுக்கு யாரும் கேட்காமலேயே சரியான விடைக ளைக் கூறுவது போலவே அமைந்திருக்கும். அவரின் குழப்பமற்றக் கொள்கைத் தெளி வால்தான் அவரின் பேச்சுகளுக்கு எல்லாத் தலைவர்களின் மத்தியிலும் மிகுந்த வரவேற்பு இருந்தது. இந்தியாவில் ஜனநாயகம், சமதர்மம், சமூகநீதி, சமயச் சார்பின்மை அனைத்தும் இந்திய அரசியல் சாசனம் காட்டும் வழிகளில் நடக்க வேண்டும் என்னும் அறிவுறுத்தல் அவரின் பேச்சில் எப்போதும் பிரதிபலித்து வந்தது.

இந்திய முஸ்லிம்களின் உணர்வுகளைப் புரிந்திருந்தவர் சீத்தாராம் யெச்சூரி. சிறுபான் மையினருள் பெரும்பான்மையாக உள்ள இந்திய முஸ்லிம்களின் மனம் புண்படும் படியான காரியங்கள் நடந்த சமயங்களில் எல்லாம் யெச்சூரியின் வேதனை வெளிப் படுவதையும் கண்டனக் குரலையும் நாடு நெடுகிலும் கண்டு வந்திருக்கிறது. சிறந்த மார்க்சியவாதியாக இந்திய மக்க ளால் ஏற்றுப் போற்றப்பட்ட அவரின் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குப் பேரிழப்பா கும். நாட்டு மக்களுக்கோ ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களுடன் ஐக்கிய நாட்டு சபைத் தூதுக்குழுவில் சென்றி ருந்தபோது, நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஐ.நா. சபையில் இந்தி யத் தூதரகம் தயாரித்துக் கொடுக்கும் உரை களை தூதுக்குழுவில் சென்ற நாங்கள் அட்ச ரம் பிசகாமல் பேச்சாகப் பதிவு செய்வோம். ஆனால் யெச்சூரி, அரசின் கருத்துகளுடன் தனது சுயவிளக்கத்தையும் சேர்த்தே உரையில் எடுத்துக்கூறுவார். அவர் எத்த கைய சூழ்நிலையிலும் தனது கம்யூனிச சித்தாந்தத்தை விட்டுக் கொடுக்காதவராக இருந்தார் என்பதை அறிந்தோம். அவருடன் இருந்து பழகிய நாட்கள் நினைவுக்கு வருகின் றன. அவரைப் பற்றிய சிறப்புகளை மீண்டும் நினைக்கும் தருணமாகிறது.

தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்கள் இந்திய ஜனநாயக மண்ணில் ஒளிசிந்தி வாழ்ந்த மங்காத நட்சத்திரம். அவரின் மறைவு எனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாகும். அவரைப் பற்றி நினைக்கும் தருணம் எல்லாம் அவரின் சிறப்புகளை உணரும் தருணங்க ளாகவே காலா காலத்திற்கு அமைந்தி ருக்கும். இன்று மோடியின் ஆட்சிக்குச் சிம்ம சொப்பனமாக எழுந்து நிற்கும் இந்தியா கூட்டணியை உருவாக்கியவர்களில் முன்ன ணித் தலைவராகத் திகழ்ந்தவர் யெச்சூரி. அவரின் மறைவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது.

-பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்