குடியாத்தம், ஆக.21- வேலூர் மாவட்ட எல்லையில் உள்ள ஆந்திர மாநில வனப்பகுதி யில் கவுண்டன்யா யானைகள் சர ணாலயம் உள்ளது. இங்கு 40-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. பல குழுக்களாக பிரிந்து அடிக்கடி தமிழ்நாடு பகுதிகளுக்குள் புகுந்து தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. குடியாத்தம் அருகே உள்ள மோர்தானா அணையின் முழு கொள்ளளவு தண்ணீர் உள்ளது. மோர்தானா அணையின் கடைசி பகுதியில் யானைகள் கூட்டம் கூட்ட மாக மறுபக்கத்திற்கு செல்லும். இந்நிலையில், அணையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அணையின் கரை பகுதியில் குட்டி யானை ஒன்று இறந்து மிதந்து கொண்டிருந்தது. இது குறித்து ஆடு மேய்ப்பவர்கள் வனத்துறைக்கும் வருவாய் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் யானை இறந்து கிடக்கும் பகுதிக்கு செல்ல முயன்றனர். ஆனால் அந்த பகுதி யில் காட்டு யானைகள் ஆவேசமாக சுற்றி திரிந்தன. தூரத்தில் யானை கூட்டம் இருப்பது தெரிந்ததால் வனத்துறையினர் திரும்பி வந்துவிட்டனர். குடியாத்தம் வனச்சரக அலுவ லர் வினோபா தலைமையில் வனத்துறையினர் மீண்டும் சென்றனர். அப்போது காட்டு யானை கரை ஒதுங்கியது. இதனைத் தொடர்ந்து, இறந்த யானையை கால்நடை மருத்துவர் கொண்டு மோர்தானா கரைப்பகுதியில் பிரேத பரிசோதனை செய்தனர். யானை கரையை கடந்து செல்லும் போது சேற்றில் சிக்கி இறந்ததா, அல்லது ஏதாவது காயம் ஏற்பட்டு நீந்த முடியாமல் இறந்ததா? என பிரேத பரிசோதனைக்கு பின் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.