திருநெல்வேலி, ஜூன் 22- நெல்லை-நாகர்கோவில் ரயில்வே வழித்தடத்தில் நாங்குநேரி அருகே நெடுங்குளத்தில் ரயில்வே கேட் உள்ளது. நெடுங்குளம், தாழை குளம், உண்ணங்குளம், அம்பலம், மூலைக் கரைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பொது மக்கள் இந்த ரயில்வே கேட் வழியாக சென்று வருகின்றனர். இந்த ரயில்வே கேட்டில் கேரளாவை சேர்ந்த விஷ்ணு என்பவர் கீப்பராக பணியாற்றி வருகிறார். நெல்லை-நாகர்கோவில் வழித்தடத் தில் செல்லும் அனைத்து ரயில்களும் இந்த வழியாக செல்வதால் இந்த கேட் அடிக்கடி மூடப்படுவதும், ரயில்கள் சென்ற பிறகு திறக்கப்படுவதும் வழக்கம். இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை விஷ்ணு பணியில் இருந்த போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் அத்துமீறி கேட் கீப்பர் இருந்த அறைக்குள் புகுந்துள்ளனர். அப்போது விஷ்ணு வை அவதூறாக பேசி தாக்க முயன்ற தால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கி ருந்து தப்பி ஓடிவிட்டார். இதனை யடுத்து மர்ம நபர்கள் அந்த அறையில் இருந்த 2 தொலைபேசிகளை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர். மேலும் தங்கள் கையில் கொண்டு வந்த பெட்ரோல் பாட்டிலை அந்த அறையில் ஊற்றி தீ வைக்க முயற்சி செய்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக தீ பற்றாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதன்பின் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து விஷ்ணு நாகர்கோவில் ரயில்வே போலீசார் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளார். உடனே அங்கு விரைந்த ரயில்வே போலீசார் தடயங்களை சேக ரித்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.