states

பிரதமர் மோடி மீது அமித்ஷாவுக்கு என்ன கோபம்?

மேட்டூர், ஜுன் 12- பிரதமர் மோடி மீது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது  என்ன கோபம் என்று தெரியவில்லை  என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். மேட்டூர் அணையை பாசனத்  திற்கு திறந்து வைத்த பின்பு  செய்தி யாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், அதி முக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட  திட்டங்களையே திமுக அரசு திறந்து  வைத்து வருவதாக எடப்பாடி கே. பழனிசாமி சொல்வது, இது அதிமுக வின் பாணி. மெட்ரோ ரயில் திட்டம்  தொடங்கி திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்  டங்கள் அதிமுக ஆட்சியில் திறப்பு  விழா கண்டிருக்கிறது என முதல மைச்சர் ஸ்டாலின் பட்டியலிட்டார். மேலும், அம்மா உணவகத்தை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை.  தொடர்ந்து பொய் குற்றச்சாட்டுக் களை எதிர்க்கட்சித் தலைவர் எடப் பாடி பழனிசாமி கூறி வருகிறார்.  மோடி மீது அமித்ஷாவுக்கு என்ன கோபம் தமிழகத்தைச் சேர்ந்த இருவரை  பிரதமராக விடாமல் திமுக தடுத்து விட்டதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பது தொடர்  பான கேள்விக்கு, அமித்ஷா வெளிப்  படையாக சொன்னால்தான் விளக்  கம் அளிக்க முடியும்.

ஆனாலும், தமி ழர் ஒருவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது மகிழ்ச்சி அளிக்கி றது. தமிழகத்தை சேர்ந்த தமிழிசை,  முருகன் ஆகியோருக்கு வாய்ப்பு  கிடைக்கும் என்று எதிர்பார்க்கி றேன், பிரதமர் மோடி மீது உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு என்ன கோபம் என்று தெரியவில்லை.  திமுக-காங்கிரஸ் ஆட்சியின் போது தமிழகத்திற்கென பல்வேறு  சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப் பட்டது. 9 ஆண்டுகால பாஜக ஆட்சி யின் போது தமிழகத்திற்கென கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்து கேட்டதற்கு இதுவரை பதில்  கிடைக்கவில்லை. மத்திய திட்டங்க ளுக்கு தொடர்ச்சியாக நிதி ஒதுக் கீடு செய்துள்ளது தொடர்பான விவ ரங்களை மட்டுமே பாஜக கூறி வரு கிறது. அனைத்து மாநிலங்களுக் கம் ஒன்றிய அரசில் இருந்து பொது வாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ள விவரங்கள் மட்டுமே வெளி  வந்துள்ளது. ஜிஎஸ்டி வரி செலுத்து வதில் தமிழகம் மட்டுமே முதலி டத்தில் இருக்கிறது. ஆனால், தமிழ கத்திற்கான நிதி குறைவாகவே வழங்கப்பட்டு வருகிறது. மதுரையில் 1200 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப் பதாக சொல்லிய நிலையில், இது வரை அங்கு எந்த பணிகளும் நடை பெறவில்லை. அவினாசி அத்திக்  கடவு திட்டம் முடியும் தருவாயில்  இருப்பதால் விரைவில் தொடங்கப் படும் என்றார். இந்நிகழ்வின் போது,  அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், மதிவேந்தன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.