மதுரை, ஜூலை 24- தமிழ்நாடு அரசு கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு ஒப் பந்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு கூட்டுறவு நூற்பாலைகளில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுக் கூட்டம் தலைவர் கே. தாய் மாதவன் ,கெளரவ தலைவர் சொ. மகராஜ பிள்ளை ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
தற்பொழுது கூட்டுறவு பஞ்சாலைகள் பகுதி யளவே இயங்கும் தன்மை உள்ளது. ஆலை களை முழுமையாக இயக்க துணி நூல் துறையும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 24.4.2022ஆம் தேதி கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் முன்னிலையில் நடந்த ஊதிய பேச்சு வார்த்தையில் கூட்டுறவு பஞ்சாலை தொழிலா ளர்களுக்கு மாத ஊதிய உயர்வு ரூ.2500 கொடுப் பதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஊதிய ஒப்பந் தம் முடிவடைந்த 1.1.2021 ஆம் தேதியிலிருந்து ஊதிய ஒப்பந்தம் அமலாக வேண்டும். கடந்த காலங்களில் ஊதிய ஒப்பந்தம் பேசி முடித்த வுடன் உடனடியாக அமல் செய்யப்படும் தன்மை இருந்தது. ஒப்பந்தம் பேசி முடிக்கப்பட்ட ஓரிரு நாட்களில் மத்திய தொழிற்சங்க தலைவர்களு டன் மாநில அளவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு, ஆலை மட்டத்தில் 12 (3)ஒப் பந்தம் போடப்பட்டு அமலாக்கப்படும் என்ற நிலைமைக்கு மாறாக தற்பொழுது 3 மாதங்கள் கடந்த பின்னும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கவில்லை. துணி நூல் துறை அலுவல கத்தின் அதிகாரிகளை அணுகி கேட்கின்ற பொழுது ஒரு வார காலத்திற்குள் தீர்வு அடை யும் என பல வாரங்களாக சொல்லும் நிலை உள்ளது. இது சம்பந்தமாக அமைச்சரின் கவ னத்திற்கு தொழிற்சங்கங்கள் கொண்டு சென் றுள்ளன. பேச்சுவார்த்தை அடிப்படையில் ஊதிய ஒப்பந்தம் உடனடியாக அமலாக்கப்பட வேண்டும். தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்க வேண்டும். ஆலை முழுமை யாக இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை களை அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பாக வலியுறுத்துகிறோம்.
கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர், துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து கோரிக்கை விடுப்பது என்றும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்திற்குள் தொழிற்சங்கங்கள் முன் வைத்திருக்கின்ற கோரிக்கைகளில் தீர்வு ஏற் படாத பட்சத்தில் மீண்டும் கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்பது என்று தீர்மானிக்கப் பட்டுள்ளது. மத்திய தொழிற்சங்கப் பிரதிநிதிகளாக தலைவர்கள் எம்.அசோகன் (சிஐடியு), கே.கண் ணன் (ஹெச்எம்எஸ்), வி.ஜெயராமன் (ஏடிபி), டி.சந்திரசேகர் (ஏஐடியுசி) , ஆர். ஜெயசீலன் (பிஎம்எஸ்), கேபிரசாந்த் (எல்எல்எப்) ஆகி யோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.