states

9 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

சென்னை, ஜூன் 6- தமிழ்நாட்டில் தேர்வு எழுதிய 9 ஆம் வகுப்பு மாணவர்கள் அனை வரும் தேர்ச்சி பெற்றதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் ஆண்டுதோறும் தேர்ச்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது 9 ஆம் வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இறுதித் தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுக்கா மல் அனைவரையும் தேர்ச்சி பெற்ற தாக அறிவிக்க அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தர விட்டுள்ளது. அதேசமயம் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்ச்சி இல்லை என்றும், இறுதித் தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு தனித் தேர்வு நடத்த வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறை தெரி வித்துள்ளது. கொரோனா தாக்கம் காரண மாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள் ளதாகவும், தேர்வுகளில் பங்கேற் காத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தி தேர்ச்சியளிக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.