தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர் நாடக விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடக மாநில அரசு திறந்துவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை அவ சர வழக்காக விசாரிக்க கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப் பட்டுள்ளது. கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக கர்நாடகாவில் ஆகஸ்ட் 23 அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும். அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவெ டுக்கப்படும். உச்சநீதிமன்ற உத்தரவின் படி தமிழகத்திற்கு நீர் திறக்கப்பட்டுள் ளது. கர்நாடகத்தில் மழை குறைவு காரண மாக இங்குள்ள விவசாயிகளும் பாதிக்கப் பட்டுள்ளனர். இதுபோன்ற கடினமான சூழ்நிலையில் விவசாயிகளுக்கு ஆதர வாக நிற்க வேண்டியது அரசின் கடமை. உச்சநீதிமன்றத்தில் காவிரி வழக்கை எதிர்கொள்ள உரிய வாதங்களுடன் தயா ராக இருக்கிறோம். அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பின்னர் முக்கிய முடிவு எடுக் கப்படும் என்று தெரிவித்துள்ளார்.