இந்திய விவசாயிகள் இயக்கத் தின் மிகச்சிறந்த தலைவர்களில் தோழர் சங்கரய்யாவும் ஒருவர். தமி ழகத்தில் விவசாயிகள் இயக்கத்தை வலுவாக கட்டியமைத்ததில் அவ ரது பங்கு அளப்பரியது. தற்போது தமிழகத்தில் அகில இந்திய விவ சாயிகள் சங்கத்திற்கு 8லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ள னர். அகில இந்திய அளவில் 27 மாநி லங்களில் ஒருகோடியே 45லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். 1986 ஆம் ஆண்டு பாட்னாவில் நடைபெற்ற அகில இந்திய விவசாயிகள் சங்க த்தின் பொன்விழா மாநாட்டில் தோழர் சங்கரய்யா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது விவசாயிகள் சங்கத்தின் மற்றொரு மாபெரும் தலைவரான கோதாவரி பருலேகர், சங்கத்தின் தலைவராக இருந்தார். ஒரே நேரத்தில் இயக்க த்திற்கு தலைமை வகித்த மகத்தான போராளிகள் இவர்கள். 1991 ஆம் ஆண்டு நாட்டில் நவீன தாராளமய பொருளா தாரக் கொள்கைகள் அறிமுகப் படுத்தப்பட்டபோது பல விவசாயிகள் அமைப்புகள் அதை வரவேற்றன. அடுத்தாண்டு 1992ல் ஹரியானா மாநிலம் ஹிஸ்ஸாரில் நடைபெற்ற விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டில் மகத்தான தலை வர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித், சங்கத்தின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
அப்போது அகில இந்திய தலைவராக சங்கரய்யா தேர்வுசெய்யப்பட்டார். நவீன தாராளமய பொருளாதார கொள்கைகளை உறுதியுடன் எதிர்ப்பது என்று அந்த மாநாட்டில் முடிவுசெய்யப்பட்டது. அந்த கொள்கைகள் தீவிரமாக அமலுக்கு வந்த பின்னர் நாட்டில் கடந்த 25 ஆண்டுகளில் 4லட்சத்திற்கும் அதிக மான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த 10ஆண்டு களில் மோடியின் ஆட்சியில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவ சாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். விவசாயிகள் சங்கம் அரசின் மோச மான கொள்கைகளை எதிர்த்து சவா லான கால கட்டத்தில் போராடியபோது சங்கத்திற்கு திறமையான முறையில் வழிகாட்டியவர் தோழர் என்.சங்கரய்யா என்றால் மிகையல்ல.பொருளாதார சுரண்டலுக்கு எதிராக வும் சமூக ஒடுக்கு முறைக்கு எதிராக வும் அவர் போராடினார். கடைசியாக திருச்சூரில் நடைபெற்ற சங்கத்தின் அகில இந்திய மாநாட்டிற்கு தமிழக விவசாயிகள் இயக்கத்தின் தியாக பூமியாய் கீழ்வெண்மணியில் இருந்து கொண்டுவரப்பட்ட தியாகிகள் ஜோதி பயணத்தை அவர் கொடியசைத்து தொடங்கிவைத்ததை மறக்க முடியாது. அப்படிப் பட்ட மகத்தான தலைவர் என். சங்கரய்யாவுக்கு அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மீண்டும் ஒருமுறை செவ்வணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்துகிறேன்.